துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

செவ்வாய், 13 ஜூன், 2023

துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் சிறப்பு

 துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் சிறப்பு

உங்கள் வாழ் நாளில் மிகச் சிறந்த 10 நாட்களாகும்:
அல்லாஹ் தான் படைத்தவற்றில் ஓர் சிலதை விட சிலதை சிறப்பாக்கியிருக்கின்றான். ஓர் சில மாதங்களை விட மற்றும் சில மாதங்களை, ஓர் சில நாட்களை விட மற்றும் சில நாட்களை சிறப்பாக்கியிருக்கின்றான். துல் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களையும் அல்லாஹ் ஏனைய நாட்களை விட சிறப்பாக்கியிருக்கின்றான்.
ஒரு முஃமினுடைய வாழ்வில் மிக மகத்தான நாட்களே! துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள். இந்த மகத்தான நாட்களை இறை நெருக்கத்தைப் பெறும் விதத்தில் நற்செயலகளின் மூலம் அழகுபடுத்துவதற்கு ஒவ்வொரு இறை நம்பிக்கையாளனும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
1- அல்லாஹ் துல் ஹஜ் மாத முதல் பத்து இரவுகளையும் அதன் மீது சத்தியமிட்டு கண்ணியப் படுத்தியுள்ளான்.
وَلَيَالٍ عَشْرٍۙ‏
"பத்து இரவுகளின் மீது சத்தியமா", (அல்குர்ஆன் : 89:2)
பத்து இரவுகள் என்பது துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகளாகும். என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.
2- துல்ஹஜ் மாத முதல் 10 நாட்களில் செய்யப்படும் நற்செயல்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை விட சிறப்புக்குரியதாகும்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலைவிடச் சிறந்ததல்ல” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அறப்போரை விடவுமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், “அறப்போரை விடவும்தான்; ஆயினும், தமது உயிரையும் பொருளை யும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று சொன்னார்கள். (புஹாரி 969)
ஏனைய நாட்களில் செய்யும் கடமையான நற்செயல்களை விட இந்நாட்களில் செய்யும் கடமையான நற்செயல்கள் அல்லாஹ்விடத்தில் சிறப்புக்குரியவைகளகாகும். ஏனைய நாட்களில் செய்யும் உபரியான நற்செயல்களை விட இந்நாட்களில் செய்யும் உபரியான நற்செயல்கள் அல்லாஹ்விடத்தில் சறிப்புக்குரியவைகளாகும். ஏனைய அனைத்து நற்செயல்களும் இவ்வாறுதான்.
உங்கள் வாழ் நாளில் மகத்தான அந்த 10 நாட்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு இதோ சில வழி காட்டல்கள்:
1- பாவ மீட்சி:
கடந்த காலத்தில் நிழக்ந்த அனைத்து பாவங்களுக்கும் உள்ளமுறுகி தூய உள்ளத்துடன், மன உறுதியுடன் அந்தப் பாவங்களை மறு படியும் எனது வாழ்வில் நான் எண்ணிக் கூட பார்க்க மாட்டேன் என்ற மன உறுதியுடன் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடி அவன் பால் மீண்டவராக, எந்தப் பாவமும் அற்ற தூய மனிதராக துல் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களை வரவேற்கத் தயாராகுங்கள்.
நற்செயல்களுக்கு பெரும் தடையாக இருப்பது நமது பாவங்களே! எனவே நாம் முதலில் நமது பாவங்களுக்கு மன்னிப்பைத் தேடிக் கொள்வோம்.
2- பிரார்த்தனை:
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களை அடைந்து அதிகம் அதிகம் நற்கருமங்கள் செய்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அடியானாக மாறுவதற்கு அவனிடம் உறுதியான உள்ளத்துடன் பிரார்த்தியுங்கள்.
3- தூய உள்ளம்:
எந்த அற்ப உலகியல் நோக்கமும் இன்றி இறை திருப்தி, மறுமை வெற்றி, இறையச்சத்தை அதிகப்படுத்தல் போன்ற தூய எண்ணங்களை மாத்திரம் நோக்காகக் கொண்டு துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களை வரவேற்கத் தயாராகுங்கள்.
4- மன உறுதி:
மார்க்கம் கூறியிருக்கும் எல்லா விதமான நற்செயல்களிலும் முந்திச் சென்று அதிகமதிகம் வணக்க வழிபாடுகள் செய்து இறை திருப்தியை பெறுவேன் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள்.
5- நேரத்தை நன்றாகத் திட்டமிடுங்கள்:
துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்கள் வேகமாக நகரும் சில நாட்கள், அதன் ஒவ்வொரு நொடியும் நிமிடமும் மிகவும் பெறுமதியானவை. 10 நாட்கள் என்றால் 240 மணி நேரம் இதை உரிய முறையில் திட்டமிடுங்கள். ஒரு நாளுடைய 24 மணி நேரத்தை சரியாக திட்டமிட்டு வகுத்துக் கொள்ளுங்கள். கடமையாக தொழுகைகளை கூட்டாக நிறைவேற்றுங்கள், இரவுத் தொழுகையில் கவனம் செலுத்துங்கள், பிந்திய இரவில் எழுந்து தொழுது பாவ மன்னிப்பு தேடுங்கள், இரவுத் தொழுகையில் அதிகம் குர்ஆனை ஓதுங்கள், ஸஹருடைய நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுங்கள். பஃஜ்ரின் முன் சுன்னத், பாங்கிற்கும் இகாமத்திற்கும் மத்தியில் பிரார்த்தனை, அல்குர்ஆன் ஓதுதல், பஃஜ்ரை ஜமாஅத்துடன் தொழுதல், கடமையான தொழுகையின் பின் ஓத வேண்டிய திக்ருகள், பிரார்த்தனைகள், அல்குர்ஆன் ஓதுதல். காலை, மாலை, இரவில் ஓத வேண்டிய திக்ருகளை, பிரார்த்தனைகளை ஓதுதல், ழுஹாத் தொழுகையை தொழுதல், தான தர்மங்களை செய்தல், உபரியான நோன்புகளை நோற்றல், நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல், உடல் உறுப்புக்களை பாவங்களை விட்டு பேணிக் கொள்ளல். குறிப்பாக நாவையும், கண்களையும், காதுகளையும் பேணல். குறைந்தது குர்ஆனை ஒரு முறையேனும் ஓதி முடித்தல். மார்க்க நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தல். இவ்வாறு துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் நேரங்களை நன்றாகத் திட்டமிட்டு வகுத்துக் கொள்ளுங்கள்.
6) மனம் நிறைந்த மகிழ்ச்சி:
ஒரு முஃமினின் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் இவைகள். ஏனெனில் இந்நாட்களில்தான் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஹஜ் கடமை நிறைவேற்றப்படும் சிறந்த நாட்கள் அமைந்துள்ளன. இன்னும் இந்நாடகளில் செய்யப்படும் நற்செயல்கள் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவைகள், அல்லாஹ்வின் வழியில் போர் புரிவதை விட அவனிடத்தில் சிறப்பானவைகள், இந்நாட்களில்தான் இரண்டு வருட பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் அரஃபாவுடைய நோன்பிருக்கின்றது, நரகத்திற்குரியவர்கள் அதிகம் விடுதலை செய்யப்டும் நாளாக அரஃபாவுடைய நாள் இருக்கின்றது, மத்தான நாளாகிய ஹஜ்ஜுப் பெருநாளுடைய தினம் இருக்கின்றது, அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரிய வணக்கமான உழிஹிய்யா வணக்கம் இருக்கின்றது இவ்வளவு சிறப்புகளிருக்கும் போது இதன் வருகை எப்படி ஒரு முஃமினுக்கு மகிழ்ச்சி தராமல் இருக்க முடியும்?
7) துல்ஹஜ் மாத முதல் 10 நாட்களின் சிறப்புகளை அதனுடன் தொடர்பு பட்ட மார்க்க சட்ட திட்டங்களை அறிந்து கொள்ளுங்கள்:
துல்ஹஜ் மாத முதல் 10 நாட்களின் சிறப்புகள், அந்த நாட்களுடன் தொடர்புடைய அமல்களின் சட்ட திட்டங்கள் பற்றி மார்க்க ஆதாரங்களுடன் எழுதப்பட்ட ஆக்கங்களை, நூற்களை வாசிப்பது, ஆதாரங்களுடன் கூடிய உரைகளை செவிமடுப்பது, அப்படியான சிறப்பு நிகழச்சிகளில் பங்கெடுப்பது. முன் சென்ற நல்லோரின் வாழ்வில் துல்ஹஜ் மாத முதல் 10 நாட்கள் எப்படி இருந்தது? என்ற ஆக்கங்களை அதிகம் படித்து அந்த முன்மாதிரிகளை நமது வாழக்கைக்கு எடுத்துக் கொள்வது. இன்னும் குடும்ப உறவுகளுக்கும், மனைவி, மக்களுக்கும் அவைகளை வாசிப்பதற்கு கேட்பதற்குள்ள வசதிகளை செய்து கொடுப்பது.
8- இந்த பெறுமதி மிக்க 10 நாட்களை சமூக வலை தளங்களில், ஏனைய பயனற்ற விடயங்களில், பாவமான விடயங்களில் வீணடித்து விடாமல். சிறந்த, முதன்மையான அமல்களை முதன்மைப் படுத்தி நற் செயல்களின் முந்திச் செல்லுங்கள். ஆகுமான விடயங்களுக்குக் கூட நேரங்களை மட்டுப் படுத்தி சிறந்த அமல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா

 இவ்வசனங்கள் (6:2, 7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 55:14) மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் எனக் கூறுகின்றன.

 هُوَ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ طِيْنٍ ثُمَّ قَضٰۤى اَجَلًا  ؕ وَاَجَلٌ مُّسَمًّى عِنْدَهٗ‌ ثُمَّ اَنْـتُمْ تَمْتَرُوْنَ‏ 
6:2. அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்; இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது; அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.

 ‌قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ‌ ؕ قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ‌ ۚ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ‏ 
7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
وَلَـقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ‌ۚ‏ 
15:26. ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰۤٮِٕكَةِ اِنِّىْ خَالـِقٌۢ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ‏ 
15:28. (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்: “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்” என்றும்,
قَالَ لَمْ اَكُنْ لِّاَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهٗ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ‏ 
15:33. அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்று கூறினான்.
اِذْ قُلْنَا لِلْمَلٰۤٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَ قَالَ ءَاَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِيْنًا‌ ۚ‏ 
17:61. இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ: “களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?” என்று கூறினான்.
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ سُلٰلَةٍ مِّنْ طِيْنٍ‌ ۚ‏ 
23:12. நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.
  الَّذِىْۤ اَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهٗ‌ وَبَدَاَ خَلْقَ الْاِنْسَانِ مِنْ طِيْنٍ‌ۚ‏ 
32:7. அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.
 فَاسْتَفْتِهِمْ اَهُمْ اَشَدُّ خَلْقًا اَمْ مَّنْ خَلَقْنَاؕ اِنَّا خَلَقْنٰهُمْ مِّنْ طِيْنٍ لَّازِبٍ‏ 
37:11. ஆகவே, “படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.
اِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ خَالِـقٌ ۢ بَشَرًا مِّنْ طِيْنٍ‏ 
38:71. (நபியே! நினைவு கூர்வீராக!) “நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்:
  قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ‌ ؕ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ‏ 
38:76. “நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று (இப்லீஸ்) கூறினான்.
 خَلَقَ الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِۙ‏ 
55:14. சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான். மனிதன் மண் என்று சொல்ல முடியாத கோலத்தைப் பெற்றுள்ளதால் முதல் மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதை மறுக்க முடியாது.

சிந்தித்துப் பார்க்கும்போது முதல் மனிதன் மட்டுமின்றி விந்துத் துளி மூலம் உருவான முதல் மனிதனின் வழித்தோன்றல்களும் உண்மையில் மண்ணாகவே இருக்கின்றனர்.

இப்போது உலகில் 700 கோடிப் பேர் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தலா 50 கிலோ என்று வைத்துக் கொள்வோம். 35,000 கோடி கிலோ மொத்த எடையாகிறது.

ஒரு மனிதனும் இல்லாதபோது பூமியின் மொத்த எடை எவ்வளவோ அதே அளவு எடை தான் 700 கோடி மக்கள் அதில் வசிக்கும் காலத்திலும் இருக்கிறது.

700 கோடி மக்கள் இப்பூமியில் அதிகமானபோதும் 35 ஆயிரம் கோடி கிலோ எடை அதிகமாகவில்லை. 700 கோடி மக்களையும் சேர்த்து பூமியின் எடை எவ்வளவோ அதே எடை தான் ஒரு மனிதனும் படைக்கப்படாத காலத்தில் பூமிக்கு இருந்தது. அதாவது பூமி, தன்னில் 35 ஆயிரம் கோடி கிலோவை மனிதனாக மாற்றியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

நாம் உண்ணுகிற உணவுகள், மண்ணின் சத்தினால் உருவானதாகும். எனவே நாம் உண்மையில் மண்ணைத் தின்று தான் உடல் வளர்க்கிறோம். இதனால் தான் நம்மால் பூமியின் எடை அதிகரிக்கவில்லை.

ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும் 50 கிலோ எடை பூமிக்கு அதிகமானால் பூமியின் எடை அதிகரித்து வேறு கோள்களுடன் மோதி பூமி சிதறிப் போய் விடும்.

நமது முப்பாட்டன்மார்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைத் தோண்டிப்பார்த்தால் எதிலிருந்து அவர்கள் படைக்கப்பட்டார்களோ அதுவாகவே அவர்கள் மாறியிருப்பதைக் காணலாம்!

ஈரக் களிமண்ணால் படைக்கப்பட்டவன் தான் முதல் மனிதன். அதாவது மண்ணும், தண்ணீரும் கலந்து படைக்கப்பட்டவன். நம் உடம்பில் இவை தாம் உள்ளன. பல வகையாக வகைப்படுத்தினாலும் அதன் முடிவும் மண் தான். நாம் மரணித்த பின் மண்ணாகவும், தண்ணீராகவும் ஆகி விடுவோம்.

முதல் மனிதன் நேரடியாக மண்ணிலிருந்தே படைக்கப்பட்டான் என்பதும் அவனது வழித்தோன்றல்கள் மறைமுகமாக மண்ணிலிருந்து தான் வளர்கிறார்கள் என்பதும் தான் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதன் பொருள்.

மண்ணால் ஆனவன் மனிதன் என்பதற்கு மனித உடலில் அங்கம் வகிக்கும் மண்ணின் மூலச்சத்துகள் சான்றாக உள்ளன. 70 கிலோ கிராம் எடையுள்ள சராசரி மனித உடலை விஞ்ஞான முறையில் பகுப்பாய்வு செய்தபோது, உடலின் மூலப்பொருட்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டன. மண்ணால் படைக்கப்பட்டவன் மனிதன் என்ற திருக்குர்ஆனின் வசனத்தை அறிவியல் உலகம் மெய்ப்பித்தது.

ஜான் நம்ஸ்லே எழுதியுள்ள க்ளாரென்டன் பதிப்பகம், ஆக்ஸ்போர்ட் வெளியிட்டுள்ள தி எமண்ட்ஸ் (மூன்றாம் பதிப்பு-1998) புத்தகத்திலிருந்து மனித உடலின் மூலப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவலைப் பாருங்கள்.

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:

1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்

2. கார்பன் 16 கிலோ கிராம்

3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்

4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்

5. கால்சியம் 1.0 கிலோ கிராம்

6. பாஸ்பரஸ் 780 கிராம்

7. பொட்டாசியம் 140 கிராம்

8. சோடியம் 100 கிராம்

9. குளோரின் 95 கிராம்

10. மக்னீசியம் 19 கிராம்

11. இரும்பு 4.2. கிராம்

12. ஃப்ளூரின் 2.6 கிராம்

13. துத்தநாகம் 2.3 கிராம்

14. சிலிக்கன் 1.0 கிராம்

15. ருபீடியம் 0.68 கிராம்

16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்

17. ப்ரோமின் 0.26 கிராம்

18. ஈயம் 0.12 கிராம்

19. தாமிரம் 72 மில்லி கிராம்

20. அலுமினியம் 60 மில்லி கிராம்

21. காட்மியம் 50 மில்லி கிராம்

22. செரியம் 40 மில்லி கிராம்

23. பேரியம் 22 மில்லி கிராம்

24. அயோடின் 20 மில்லி கிராம்

25. தகரம் 20 மில்லி கிராம்

26. டைட்டானியம் 20 மில்லி கிராம்

27. போரான் 18 மில்லி கிராம்

28. நிக்கல் 15 மில்லி கிராம்

29. செனியம் 15 மில்லிகிராம்

30. குரோமியம் 14 மில்லி கிராம்

31. மக்னீசியம் 12 மில்லி கிராம்

32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்

33. லித்தியம் 7 மில்லி கிராம்

34. செஸியம் 6 மில்லி கிராம்

35. பாதரசம் 6 மில்லி கிராம்

36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்

37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்

38. கோபால்ட் 3 மில்லி கிராம்

39. ஆண்டிமணி 2 மில்லி கிராம்

40. வெள்ளி 2 மில்லி கிராம்

41. நியோபியம் 1.5 மில்லி கிராம்

42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்

43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்

44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்

45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்

46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்

47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்

48. தால்வியம் 0.5 மில்லி கிராம்

49. இண்டியம் 0.4 மில்லி கிராம்

50. தங்கம் 0.4 மில்லி கிராம்

51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்

52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்

53. வாளடியம் 0.11 மில்லி கிராம்

54. தோரியம் 0.1 மில்லி கிராம்

55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்

56. சமாரியம் 50 மில்லி கிராம்

57. பெல்யம் 36 மில்லி கிராம்

58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.

மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தமிழ் குர்ஆன்: விளக்க குறிப்புகள் / tamililquran

புதன், 18 நவம்பர், 2015

பித்அத். அதன் பொருளும், அதைத் தவிர்த்து கொள்வதின் அவசியமும்

மனித குலத்திற்கு வாழ்வியலின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுகின்ற இஸ்லாமிய சன் மார்க்கம் இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட உயரிய நன்மார்க்கமாகும். இறுதி நபி நமது இறைத் தூதர் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் அதனை பரிபூரணப் படுத்திவிட்டான். நபிகளார் (ஸல்) அவர்கள் தமது தூதுத்துவத்தை முழுமைப்படுத்தி இஸ்லாமிய சன்மார்க்கத்தை முழுமைப்படுத்தி வைத்துவிட்டார்கள். நபிகளின் வாழ்வும், வாக்கும், திருமறை குர்ஆனும் அதனை ஊர்ஜிதம் செய்கின்றது. அல்லாஹ் தன் திருமறையில் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்:

 اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ ؕ

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் நிறைவாக்கி விட்டேன். எனது அருட்கொடைகளை நான் உங்களுக்கு முழுமையாக்கி விட்டேன். இஸ்லாமிய சன்மார்க்கத்தை உங்களுக்குரிய வாழ்க்கை நெறியாக நான் அங்கீகரித்துக் கொண்டு விட்டேன். (5 : 3)

இறைமார்க்கம் இஸ்லாம் இவ்வாறு முழுமை படுத்தப்பட்டிருந்த போதிலும், நபிகளாரிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது, அவர்களையே பின்பற்ற வேண்டும் என திருமறையும், நபியின் வாழ்வும் உறுதியாக வலியுறுத்திய போதிலும் பிற்காலத்தில் வாழ்ந்த சமுதாயத்தினர் சிலர் இஸ்லாத்தினுள் பலவிதமான புதுப்புது கொள்கைகளையும் வழிபாடுகளையும் புகுத்தினர். மற்றும் சிலர் தாம் வாழ்ந்த சூழல், நாடு, மொழி, இனம் போன்றவற்றில் ஊறிக் கிடந்த மத, கலாச்சார கொள்கைகளை ஒட்டிய சில பழக்க வழக்கங்களையும், பிற மதங்களின் செயற்பாடுகளையும் மார்க்கத்தின் பெயரால் பக்தி பரவசத்துடன் கடைப்பிடிக்கத் தலைப்பட்டனர். இவ்வாறு உருவானது தான் பித்அத் ஆகும்.

மார்க்கத்தில் இல்லாத, புதிய நூதனச் செயல்கள் அனைத்துமே பித்அத் என வழங்கப்படுகிறது. எனவே புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத் எனும் நூதனச் செயல்களாகும். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் கற்றுத்தராத ஒன்றை, கட்டளையிடாதவற்றை முன்னோர்கள், பரம்பரையினர் செய்தார்கள், செய்கின்றார்கள் என்ற ஒரே காரணத்தினால் மார்க்கத்தின் ஒரு அங்கமாக நினைத்து செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக அது வழிகேடாகும். அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும். அத்தோடு அதற்கு மறுமையில் தண்டனையை யும் அனுபவிக்க வேண்டிவரும்.

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படும் அனைத்தும் வழி கேடுகளாகும்|. (புகாரி). 
மேலும் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் : யார் நம்முடைய இந்த மார்க்கத்தில் அதில் இல்லாத ஒன்றைப் புதிதாக எவரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்பட்டு விடும்| (முஸ்லிம்). 
மேலும் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் : மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களைத் தண்ணீர் அருந்த விடாமல் மலக்குமார்கள் இழுத்துச் சென்று விடுவார்கள்|. (புகாரி)

யாராவது ஒருவர் அவ்வாறான நூதன செயல்களை அங்கீகரிப்பாரேயானால் மார்க்கம் பூர்த்தியாக்கப்படவில்லை என்ற முடிவுக்கோ, நபியவர்கள் தனக்கிட்ட கட்டளையை சரிவரப் பூர்த்தி செய்யாமல் எதனையோ விட்டு விட்டார்கள் என்ற முடிவுக்கோ அல்லது அன்னார் தனக்குக் கிடைத்த மார்க்கத்தை சம்பூர்ணமாக மக்களுக்குப் போதிக்காமல் விட்டுவிட்டார்கள் என்ற முடிவுக்கோ அவர் வந்து விட்டார் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது. ஆனால் அன்னாரின் வாழ்நாளிலேயே அல்லாஹ் மார்க்கத்தைப் பூர்த்தி செய்து விட்டதாக ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டுள்ள அல்-குர்ஆனின் இறை வசனம் சாட்சி பகர்கின்றது. இக்குர்ஆன் வசனம் நபி (ஸல்) அவர்கள் தனது ஹஜ்ஜில் அறஃபாவில் இருக்கும்போது அருளப்பட்டதாகும்.

இவ்வாறு மார்க்கத்தில் விளையாடிய முன்னர் வாழ்ந்த யூத-கிறிஸ்தவ சமுதாயங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளை அல்குர்ஆன் பல இடங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் அதன் கேடுகளைக் கடுமையாக எச்சரிக்கின்றது. எனவே நாமும் மார்க்கத்தில் இவ்வாறான புதிய செயல்கள், பழக்க வழக்கங்கள் உருவாக்குவதை விட்டும் முற்றிலும் விலகி இருக்க வேண்டும்.

மேலும் நாம் அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் வைத்திருக்கும் அன்பிற்கு அடையாளமே இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுவதும், அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் மாற்றம் செய்யாமலிருப்பதுமாகும். இதனைத் திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது:


قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ 
(நபியே! மனிதர்களிடம்) நீர் கூறுவீராக!  “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.. (3 : 31)

அல்லாஹ்வும் ரஸூலும் வணக்க வழிபாடுகள் நற்கிரியைகள் என எதனைக் கற்றுத் தந்துள்ளார்களோ அவ்வாறே சற்றும் பிசகாமல் புரிந்து அவற்றிற்கான பிரதிபலன்களைப் பெற்றுக் கொள்ள கருணைமிகு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக!

நம் சமூகத்திலுள்ள சில பித்அத்துகள்

இஸ்லாம் மார்க்கம் அகிலத்தின் இரட்சகனான அல்லாஹ்வால் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் மனித இனத்தின் இரட்சிப்புக்காக அருளப்பட்டது. அந்த இறை மார்க்கம் இஸ்லாம் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்திலேயே முழுமை பெற்று விட்டது என்று அல்குர்ஆனும் அன்னாரது வாக்கும் வாழ்வும் தெளிவான ஆதாரமாக இருக்கும்போது, மக்கள் தம் கருத்துக்களையும் செயல்களையும், பிற மத கோட்பாடுகளையும், கலாச்சாரங்களையும், இஸ்லாத்தில் நுழைத்தும், திணித்தும் செயல்படுகின்றனர். இவை நம் சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற அனுமதிக்க முடியாத பித்அத்துக்களாகும். அவற்றில் சில:

மீலாத் விழா

ரபீயுல் அவ்வல் மாதம் பிறந்து விட்டாலே அது நபியவர்கள் பிறந்த மாதம் என்று கூறிக்கொண்டு விழாக் கோலம் பூண்டு விடுகின்றனர். இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா என்று அல்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆராய்ந்து பார்ப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் முக்கிய கடமையாகும்.

நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்களுக்குப்பின் வாழ்ந்த தாபிஈன்களும் நபி (ஸல்) அவர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும், இஸ்லாத்தை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களாகவும் இருந்தனர். நபியவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது நன்மை பயக்கும் என்றோ அல்லது நன்மையான காரியம் என்றோ இருக்குமானால் அவர்கள் பிரமாண்டமான பல விழாக்கள் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அவர்களோ நபியவர்கள் சம்பந்தமாக எந்த விழாவையும் கொண்டாட வில்லை.

கிறிஸ்தவர்கள் நபி ஈஸா அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதால் நாமும் நமது தலைவர் விழாவைக் கொண்டாடலாமே என்ற எண்ணத்துடன் நம் சமூகத்தினரும் இவ்வாறு பலவிதமான வழிபாடுகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாட்டுக் கச்சேரிகள் போன்ற நிகழ்ச்சிகளுடன் கொண்டாட ஆரம்பித்திருக்கின் றனர். அவற்றில் சில பள்ளிவாசல்களிலேயே மார்க்கம் என்ற பெயரில் அரங்கேறுகின்றன. அவற்றில் அதிகமானவை அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத இணைவைக்கக் கூடிய விடயங்களும் நடைபெறுகின்றன. ஆனால் நபியவர்களோ இவற்றையெல்லாம் முட்டை கட்டிவிடும் விதமாக பிற சமயக் கலாசாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன்| என எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அபு-தாவூத்).

மீலாது விழாக் கொண்டாடுவதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லாவிட்டாலும் நபியவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக விழாக் கொண்டாடலாம் என சிலர் காரணம் கூறுவர். வெளிப்படையாக இது நல்ல காரியமாகத் தெரிந்தாலும் இங்கு மார்க்கத்திற்கு முரணான செயல்களும், அனாச்சாரங்களுமே அதிகம் உள்ளன. ஆகவேநபியவர்கள் அனுமதிக்காத மீலாத் விழாவும் முற்றிலும் மார்க்கத்திற்கு அப்பாற்பட்ட செயலாகும்.

மற்றைய நிகழ்ச்சிகள்

அதே போல் ஸஃபர் மாதம் பீடை நிறைந்த மாதம் என்றும் மக்கள் மத்தியில் ஒரு தப்பான அபிப்பிராயம் இருந்து வருகின்றது. நபியவர்கள் நவின்றதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: தொற்று நோய், சகுனம், ஆந்தை அலறலின் கேடு, ஸஃபர் கேடு போன்றன இஸ்லாத்தில் இல்லை| (புகாரி, முஸ்லிம்)

இந்த மாதம் பீடை பிடித்த மாதம் என்று அனேகர் அம்மாதத்தில் பிரயாணங்கள் செய்தல், பலன் கிடைக்காது என்றும் மேலும் இவ்வுலக, மறுவுலக காரியங்களைச் செய்வதிலும் ஒதுங்கி விடுகின்றனர். இவையனைத்தும் ஆதாரமற்ற எண்ணங்களாகும். ஸஃபர் மாதம் அல்லது அது அல்லாத ஒரு காலத்தைக் கொண்டு அது பீடை பிடித்தது என்று கூறுவது தப்பாகும். காலங்கள் எல்லாவற்றையும் அல்லாஹ்தான் படைத்தான். அந்தக் காலங்களில் ஆதமுடைய மகனின் காரியங்கள் நிகழ்கின்றது. ஒரு முஃமின் தன்னை அல்லாஹ்வுக்கு வழிபடுவதில் ஈடுபடுத்திக் கொள்கின்ற காலங்கள் எல்லாம் அது அபிவிருத்தி நிறைந்த காலங்களாகும். ஒருஅடியான் பாவம் செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்ற காலங்கள் எல்லாம் அது பீடை பிடித்த காலங்களாகும்|என இப்னு ரஜப் (ரஹ்) அவாகள் குறிப்பிடுகிறார்கள்.

ஆகவே இவ்வாறானதும் மற்றும் நம் மத்தியில் உள்ள மற்றும் பித்அத்களையும் தவிர்ந்து நம் அமல்களை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்வதற்கு முயலுவோமாக! 

செவ்வாய், 20 அக்டோபர், 2015

வரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்

ஆட்ரே டிரஷ்கே நேர்காணல்

 அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மதங்கள் தொடர்பான ஆய்வுத் துறையின் உறுப்பினரான ஆட்ரே டிரஷ்கே, ‘கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி முகல் கோர்ட்’ நூலை எழுதியிருக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படவிருக்கும் இந்நூல் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் ஆட்ரே டிரஷ்கே.

இந்திய வரலாற்றுப் பக்கங்களில் முகலாயர்களுக்கு இடமில்லை என்கிறது தற்போது ஆளும் பாஜக. ஆனால் முகலாயர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் சம்ஸ்கிருத மொழியை முன்னிறுத்தினார்கள் என்கிறது உங்களுடைய புத்தகமான ‘கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி முகல் கோர்ட்’. இந்த இரு வேறு கருத்துகளும் எப்படி ஒத்துப்போகும்?

இரண்டு கருத்துகளுக்கும் இடையே சமரசம் செய்ய நான் முயற்சிக்கவில்லை. அதற்குப் பதிலாக இரண்டு முக்கியக் கேள்விகளை முன்வைக்கிறேன்.

முதலாவதாக, இந்த இரண்டில் எந்தப் பார்வைக்கு அழுத்தமான வரலாற்று ஆதாரம் உள்ளது? இரண்டாவதாக, இந்திய வரலாற்றிலிருந்து முகலாயர்களை பாஜக அழிக்க நினைப்பதற்கான அரசியல் காரணங்கள் என்ன?

வரலாற்று உண்மைகளை நேர்மையாக வெளிக்கொணருவதே என் புத்தகத்தின் நோக்கம். இந்திய வரலாற்றில் பெரும் பங்கு வகித்தவர்கள் முகலாயர்கள். அதேபோல, அவர்களுடைய சாம்ராஜ்ஜியத்தில் சம்ஸ்கிருத மொழிக்குத் தனி முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இத்தகைய உண்மைகள் பாஜகவுக்கு அசவுகரியமாக இருக்கலாம். ஆனால் வரலாற்றாசிரியர் என்ற முறையில் எத்தகைய சமரசமும் இன்றியே இதை நான் சொல்கிறேன். இந்தியாவின் கடந்த காலத்தை மிகவும் பலவீனமான முறையில் மாற்றி எழுத முயல்கிறது பாஜக என்பதையும் என் புத்தகம் நிரூபிக்கும்.

இதில் நகைமுரண் என்னவென்றால், ஒருபுறம், இந்த அரசு சம்ஸ்கிருதத்தைத் தூக்கிநிறுத்தப் பாடுபடுகிறது. மறுபுறம் முகலாயர்களை வெறுக்கிறது…
சம்ஸ்கிருதத்தின் ஒரு அங்கத்தை மட்டுமே தூக்கிப்பிடிக்கிறது பாஜக. இதிகாசங்கள், பண்டைய கவிதைகள் மட்டுமின்றி சம்ஸ்கிருத இலக்கியங்கள் எத்தனையோ உள்ளன. பாஜகவினர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய காளிதாசனை மட்டும் கொண்டாடுகிறார்கள். ஆனால், அதே சம்ஸ்கிருத மொழியில் முகலாயர்களைப் பற்றி 16-ம் மற்றும் 17-ம் நூற்றாண்டில் சமணர்கள் எழுதிய நூல்களைப் படிக்கும்படி மாணவர்களிடம் சொல்வார்களா?

உங்களைப் பொருத்தவரை சம்ஸ்கிருதம் மற்றும் பாரசீகத்தை வளர்த்தெடுத்த முகலாய மன்னர்கள் யார்?

அக்பர், ஜஹாங்கிர், ஷாஜஹான் உள்ளிட்டவர்களின் ஆட்சியில் சம்ஸ்கிருதம் ராஜ சபையில் கவுரவிக்கப்பட்டது. அதற்காகக் கொடுங்கோல் ஆட்சியாளராகக் கருதப்படும் அவுரங்கசீப் சம்ஸ்கிருதத்தை வெறுத்தார் என நினைத்துக்கொள்ளக்கூடாது. வரலாற்று நாயகர்களில் அநியாயத்துக்குத் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்தான். அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் சம்ஸ்கிருதம் முக்கியத்துவம் இழந்தது உண்மைதான். ஆனால் அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்திக்கு வழிவிட்டு மெதுவாகச் சம்ஸ்கிருதம் விடைபெற்றுச் செல்லத் துவங்கிய காலம் 17-ம் நூற்றாண்டு. ஷாஜஹானின் ஆட்சிக் காலத்திலேயே இந்தி இலக்கியவாதிகள் முன்னிறுத்தப்பட்டு சம்ஸ்கிருதம் மெல்ல நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் சம்ஸ்கிருதம் முற்றிலுமாகக் காணாமல்போனது ஒரு தற்செயல் நிகழ்வே.

இரண்டாவதாக, 1640,1650-களில் வெவ்வேறு கலாச்சாரங்களுக்கு இடையிலான பரிமாற்றங்களை சம்ஸ்கிருத மொழியில் பதிந்தவர் மன்னர் தாரா ஷிகவ். அவரை வீழ்த்திய பின்னரே அரியணை ஏறினார் அவுரங்கசீப். ஆட்சி மாற்றத்தை நிறுவ சம்ஸ்கிருத மொழியினால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரத் தொடர்புகளை அவர் துண்டித்தார். ஆக, சம்ஸ்கிருத மொழியை முகலாயர்கள் கைவிடக் காரணம் அரசியலே அன்றி மதமோ, கலாச்சாரமோ அல்ல.

இச்சூழலில், மற்றொரு வரலாற்று உண்மையையும் வெளிப்படுத்திவிடுகிறேன். திறந்த மனப்பான்மையும் சகிப்புத்தன்மையும் கொண்ட மதச்சார்பற்ற இஸ்லாமிய மன்னர் அக்பர் என்னும் பிம்பமும் கட்டுக்கதையே. உதாரணத்துக்கு, ஒரு முறை சமண ஞானிகளைத் தனது தர்பாரில் சந்தித்தபோது, ஓர்இறைக் கொள்கை இல்லாவிடில் அவர்களை அரசவையிலிருந்து வெளியேற்றுவேன் என எச்சரித்தாராம் அக்பர்.

மேட்டுக்குடி முகலாயர்கள், இந்து பிராமணர்கள், சமணர்கள் இடையில் எத்தகைய கலாச்சாரப் பகிர்வு அன்று இருந்தது?

அன்று, முகலாயர்களுக்கும் பிராமணர்களுக்கும் பொதுவான மொழி இந்தியாக இருந்தது. ஒரு சம்ஸ்கிருத நூலை பாரசீகத்தில் மொழிபெயர்க்க வேண்டுமானால் முதலில் பிராமணர்கள் அதை வாசிப்பார்கள். வாய்மொழியாக இந்தியில் மொழிபெயர்த்துச் சொல்வார்கள். அதைக் கேட்டுப் பாரசீகத்தில் முகலாயர்கள் எழுதிக்கொள்வார்கள். அதேபோல, சமணர்களும் பிராமணர்களும் முகலாயர்களுக்கு ஜோதிடம் கூறும் வழக்கம் இருந்தது. முகலாய ராஜ வம்சத்துக்கு பிராமணர்கள் சம்ஸ்கிருதத்தில் ஜாதகம் எழுதுவார்கள். மன்னர் ஜஹாங்கிருக்குப் பெண் குழந்தை பிறந்தவுடன் ஜாதக தோஷம் நிவர்த்தி அடைய சமணர்கள் பூஜை நடத்தியுள்ளனர். என் புத்தகத்தில் இதுகுறித்தெல்லாம் விரிவாக எழுதியுள்ளேன்.

வரலாற்றைத் திரிக்க இரு நோக்கங்கள் அவர்களுக்கு இருப்பதாக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஒன்று, முகலாய வரலாற்றை அழிப்பது. மற்றொன்று, மதக் கலவரங்கள் நிறைந்தது இந்திய வரலாறு எனப் பதிவுசெய்வது. அப்படியானால், நீங்கள் சொல்ல வருவது என்ன, முகலாயர்களின் காலத்தில் மதக் கலவரங்களே நடைபெறவில்லை என்பதுதான் உங்கள் வாதமா?

அப்படிச் சொல்லவில்லை. முகலாயர்கள் ஆண்ட இந்தியாவில் வன்முறைக்குப் பஞ்சமில்லை. வன்முறையும், கலவரமும் நிறைந்ததுதான் மனித வரலாறு என்பதில் எனக்கும் மாற்றுக் கருதில்லை. அக்பர் ஆண்டபோதும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அத்தகைய வன்முறைச் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணம் மதமா என்பதே என் கேள்வி. அரசியல் எதிரிகள் பலருடன் மூர்க்கமாகப் போரிட்டவர்கள் முகலாயர்கள். அவர்கள் சண்டையிட்டது யாருடன் எனத் தேடிப்பார்த்தால் அதில் ராஜபுத்திரர், இஸ்லாமியர், இந்துக்கள் இப்படிப் பலரை அடையாளம் காண முடியும். ஆக, இது ஆட்சிக்கான போரே தவிர மதம் மற்றும் கலாச்சாரம்சார் போர் அல்ல. ஆனால் பண்டைய இந்தியாவில் மதத்துக்குப் பெரிய இடமில்லை என்று சொன்னால் பலரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

இதையே ஜீரணித்துக்கொள்ள முடியாதவர் களுக்கு மேலும் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். மதச் சகிப்புத்தன்மையை மேற்கத்தியர்கள் கற்றுக்கொண்டதே முகலாயர்களிடமிருந்துதான் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். அதாவது முகலாயர் ஆட்சியின்போது இந்தியா வந்த ஐரோப்பியர்கள் கண்கூடாக அவர்களுடைய மதச் சகிப்புத்தன்மை கண்டு பூரித்துப்போய்த் தாங்களும் பின்பற்ற முயன்றார்கள்.

பாஜக அரசு குற்றம்சாட்டுவதைப் போல வரலாற்றை விளக்கும் முறையில் மார்க்சியர்களிடமும் சிக்கல் உள்ளதா?

என்னைப் பொருத்தவரை மார்க்சிய வரலாற்றுப் பார்வை குறுகலானதுதான். வரலாறு என்றாலே வர்க்கம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள்தான் என அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் கடந்த காலத்தை விளக்க நவீன வரலாற்றாசிரியர்களிடம் பல அணுகுமுறைகள் உள்ளன.

வரலாற்றில் முகலாயர்களுக்குப் பங்குள்ளது என்பதை ஒரு இந்து தேசியவாதிகளால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. இத்தகைய புரிதலை எப்படி மாற்றப்போகிறீர்கள்?

உலகெங்கிலும் இப்படித்தான், வரலாற்று உண்மைகளைச் சொல்லும்போதெல்லாம் அதைப் பலரால் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை. இந்தியாவில் இது அதிகம். அதே நேரத்தில் மதரீதியாக வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகள் இந்தியாவில் நடந்துவருவதைப் பலரும் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு என்னுடைய வரலாற்று ஆய்வுகள் கைகொடுக்கும்.

வரலாற்றைத் திரித்து எழுதினால் என்னவாகும்?
வரலாற்றைத் திரிப்பதும், சுருக்குவதும் அபாயகரமானது. முதலாவதாகச் சகிப்புத்தன்மை அற்றுப்போகும். ஏற்கனவே இந்தச் சிக்கலை 21-ம் நூற்றாண்டு அனுபவித்துவருகிறது. அடுத்து,கடந்த காலத்தைக் கொச்சைப்படுத்துகிறோம். இந்தியாவுக்கு அற்புதமான வரலாறு உள்ளது. ஈடு இணையற்ற இலக்கியச் செழுமை உள்ளது. ஆனால் குறுகலான பார்வை நம் ஞானக் கண்ணை மறைத்துவிடும்.

ஆங்கிலேயரின் காலத்தில்தான் (1757 முதல் 1947 வரை) முகலாயர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே முதன்முதலில் பிளவு ஏற்படுத்தப்பட்டது என்பது உங்களுடைய வாதம். தற்போது மோடி அரசாங்கம் அதே உத்தியைப் பிரயோகிக்கிறது…

மிகவும் அபாயகரமான போக்கு இது. என்னைக் கேட்டால் இந்தியாவின் மகிமையே அதன் பன்முகத்தன்மைதான். அத்தகைய செழுமைவாய்ந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ளப் பலர் முயற்சிக்கத் தவறுவதால்தான் பாஜக வரலாற்றை மாற்றி எழுதத் துணிகிறது.

தமிழில்: ம. சுசித்ரா

நன்றி: தி இந்து (ஆங்கிலம்)  தமிழ்

புதன், 26 ஆகஸ்ட், 2015

ஹஜ் செய்வது எப்படி

அல்லாஹ் சொல்கிறான் 

وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ

وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ ۚ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۖ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّىٰ يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ بِهِ أَذًى مِّن رَّأْسِهِ فَفِدْيَةٌ مِّن صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ ۚ فَإِذَا أَمِنتُمْ فَمَن تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۚ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ ۗ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ۗ ذَٰلِكَ لِمَن لَّمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான் (அல்குர்ஆன் 2:195)

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்;. அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள். ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானீ கொடுத்தல் வேண்டும். பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானீ கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானீ கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். (இந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:196)

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:197)

(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது. பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது ''மஷ்அருள் ஹராம்'' என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்;. உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள். (அல்குர்ஆன் 2:198)

பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:199)

ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், ''எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு'' என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. (அல்குர்ஆன் 2:200)

இன்னும் அவர்களில் சிலர், ''ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!'' எனக் கேட்போரும் அவர்களில் உண்டு. (அல்குர்ஆன் 2:201)

இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு. தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன். (அல்குர்ஆன் 2:202)

ஹஜ் செய்யும் முறைகள் மூன்று வகைகளாகும்

1-தமத்து

2-கிரான்

3-இஃப்ராத்

1-தமத்து: என்பது உம்ரா செய்துவிட்டு பின் துல்ஹஜ் பிறை 8 அன்று ஹஜ்ஜீக்கு இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவது


2-கிரான் : என்பது உம்ரா செய்து அந்த இஹ்ராமிலேயே ஹஜ்ஜை நிறைவேற்றுவது


3-இஃப்ராத் : என்பது ஹஜ்ஜீக்கு இஹ்ராம் கட்டி ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுவது


தல்பியா (வாசகம்) கூறும் முறை:

اللهم لبيك لبيك لاشريك لك لبيك ان الحمد والنعمة لك والملك لاشريك لك

அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லாஷரீக லக லப்பைக், இன்னல்ஹம்த வன்னிஃமத லக, வல்முல்க், லாஷரீக லக' .

இப்னு உமர் (ரலி) (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).


பொருள்: வந்துவிட்டேன். இறைவா! உன்னிடமே வந்துவிட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்துவிட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.


தல்பியாவை நிறுத்தவேண்டிய நேரம்

இஹ்ராம் கட்டிய நபர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூறவேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும்வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடித்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நான் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினாவரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள்.

ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி)(புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.)

ஹஜ் தமத்து செய்யும் முறையும் நிய்யத்தும்

1-மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து உம்ரதன் முதமத்திஅன் பிஹா இலல் ஹஜ் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்

2-(தவாஃப்); தவாஃபுல் குதூம் (உம்ரா) செய்ய வேண்டும்

3-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

4-தலை முடியை மழிக்கவோ குறைக்கவோ வேண்டும்

5-இஹ்ராமிலிருந்து விடுபட்டு துல்ஹஜ் 8 ம் நாள் வரை காத்திருக்க வேண்டும் 8ஆம் நாள் அன்று ஹஜ்ஜீக்காக இஹ்ராம் அணியவேண்டும்.


ஹஜ் கிரான் செய்யும் முறையும் நிய்யத்தும்

1-மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து லப்பைக்க உம்ரதன் வ ஹஜ்ஜன் என்று கூறி நிய்யத் செய்யவேண்டும்

2-(தவாஃப்); தவாஃபுல் குதூம் (உம்ரா) செய்ய வேண்டும்

3-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

4-தொடர்ந்து இஹ்ராமிலேயே இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றவேண்டும்


ஹஜ் இஃப்ராத் செய்யும் முறையும் நிய்யத்தும்

1- மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து லப்பைக்க ஹஜ்ஜன் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்

2- மக்காவாசிகளும் (மக்காவில்) அங்கு தங்கியிருப்போரும் மீக்காத்திற்கு வரவேண்டியதில்லை தத்தம் இருப்பிடங்களிலேயே இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம்

3- தவாஃபுல் குதூம் செய்யவேண்டும்

4- ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

5- தொடர்ந்து இஹ்ராமிலேயே இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றவேண்டும்;

நாள் : துல் ஹஜ் பிறை 8 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்பவர்கள்

மினாவுக்குச் செல்ல வேண்டும் அங்கு ஐவேளை தொழுகைகளையும் ஜம்மு (சேர்த்து) செய்யாமல் அந்தந்த வேளைகளில் நான்கு ரக்அத் தொழுகைகளை மாத்திரம் இரு ரக்அத்களாக சுருக்கித் தொழ வேண்டும்

நாள் : துல் ஹஜ் பிறை 9 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்பவர்கள்

1- சூரியன் உதயமானதும் அரஃபாவை நோக்கி செல்ல வேண்டும் அங்கு ளுஹரையும் அஸரையும் சேர்த்து ளுஹர் நேரத்திலேயே முற்படுத்தி ஓரு பாங்கு இரண்டு இகாமத்களுடன் இரண்டு இரண்டு ரக்அத்களாக சுருக்கி தொழ வேண்டும், அரஃபாதினத்தில் இறைவனை தியானித்தல், குர்ஆனை ஓதுதல், இறைவனிடம் பிரார்த்தித்தல் ஆகியவற்றை அதிகப்படுத்துவது சுன்னத்தாகும் துஆ செய்யும்போது கிப்லாவை முன்னோக்குவது நபி (ஸல்) அவர்களைப்போல கைகளை உயர்த்துவதும் சுன்னத்தாகும், அரஃபாதினத்தில் ஹாஜிகள் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதல்ல.

2- சூரியன் மறைந்ததும் முஸ்தலிஃபாவுக்கு செல்லவேண்டும், முஸ்தலிஃபாவை அடைந்ததும் மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரு பாங்கு இரு இகாமத்துடன் மக்ரிப் மூன்று ரக்அத்தும் இஷாவை இரண்டு ரக்அத்தாகவும் தொழவேண்டும்

3- மினாவில் பெரிய ஜமராவில் கல்லெறிவதற்கு ஏழு பொடிக்கற்களை எடுத்துக்கொள்ள வேண்டும் அவற்றை மினாவிலும் எடுத்துக்கொள்ளலாம்

4- முஸ்தலிஃபாவில் இரவு தங்கிவிட்டு அங்கேயே ஃபஜ்ரு தொழுதுவிட்டு பிறகு திக்ரு மற்றும் துஆக்களை அதிகப்படுத்த வேண்டும், சூரியன் உதிக்கும் முன்பு வரை அல் மஷ்அருல் ஹராமில் நின்று துஆசெய்வது விரும்பத்தக்கது, பலவீனமானவர்கள் நடு இரவுக்குப்பின்பு – சந்திரன் மறைந்ததன் பின் புறப்பட்டு மினாவந்துவிடலம்.

5- சூரியன் உதயமாகுமுன் மினாவைநோக்கிப் புரப்படவேண்டும்

நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்

1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்

2-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம் -மேலே கூறப்பட்ட இரண்டு செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்) முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது

3-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும்

4-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

குறிப்பு: நிங்கள் இஹ்ராம் கட்டி மக்காவந்து தவாஃப் செய்து பின் ஸயி செய்து இருந்தால் தற்போது ஸயி செய்ய தேவையில்லை, அப்படி செய்யாமல் இருந்தால் இன்று ஸயி செய்யவேண்டும். -

(இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக (பொரிய)விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்

நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு ஹஜ் கிரான்; செய்யக்கூடியவர்கள்

1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்

2-குர்பானி கொடுத்தல்

3-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம்

-மேலே கூறப்பட்ட மூன்று செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்) முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது

4-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும் -(இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக (பொரிய) விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்

5-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

குறிப்பு: நீங்கள் இஹ்ராம் கட்டி மக்காவந்து தவாஃப் செய்து பின் ஸயி செய்து இருந்தால் தற்போது ஸயி செய்ய தேவையில்லை, அப்படி செய்யாமல் இருந்தால் இன்று ஸயி செய்யவேண்டும்.

நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு ஹஜ் தமத்து செய்யக்கூடியவர்கள்

1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்

2-குர்பானி கொடுத்தல்

3-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம்

-மேலே கூறப்பட்ட மூன்று செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்) முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது

4-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும்

5-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது) -(இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக (பொரிய)விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்

குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் நிற்கும்போது ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் கல்லெறிவதற்கு முன்பே தலையை மழிந்து விட்டேன் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் மற்றொருவர் அவர்களிடம் வந்து நான் கல்லெறிவதற்கு முன்பே நான் குர்பானி கொடுத்துவிட்டேன் என்றார் அதற்கும் நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் மற்றொருவர் அவர்களிடம் வந்து நான் கல்லெறிவதற்கு முன்பே கஃபாவைத் தவாப் செய்துவிட்டேன் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) : புகார், முஸ்லிம், அஹ்மத்

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டு பதனு முஹஸ்ஸர் என்ற இடத்தை அடைந்ததும் (ஒட்டகத்தைச்) விரைவுபடுத்தினார்கள் ஜம்ரதுல் அகபாவை (பெரிய ஜமரா) அடையும் வழியில் புறப்பட்டார்கள் ஜம்ரதுல் அகபாவை (பெரிய ஜமரா)அடைந்ததும் ஏழுகற்களை எறிந்தார்கள் ஒவ்வொரு கல்லை எறியும்போது தக்பீர் கூறினார்கள் சுண்டி எறியும் சிறுகற்களையே எறிந்தார்கள் பதனுல்வாதி என்ற இடத்திலிருந்து எறிந்தார்கள் : ஜாபிர் (ரலி) : முஸ்லிம் - சுருக்கம்.

நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து கொண்டு கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன் அங்கே அடிதடி இல்லை விரட்டுதல் இல்லை வழிவிடுங்கள் வழிவிடுங்கள் என்பது போன்ற கூச்சால் குலப்பபம் இல்லை : குதாமா பின் அப்துல்லாஹ் (ரலி) : நஸயீ, திர்மதி, இப்னுமாஜா

நாள் : துல்ஹஜ் பிறை 11 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்

1-11 ஆம் நாள் மினாவில் தங்குவது வாஜிபாகும்


2-சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும்


நாள் : துல்ஹஜ் பிறை 12 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்

1-12 ஆம் நாள் மினாவில் தங்குவது வாஜிபாகும்.

2-சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும், விரும்பினால் சூரியன் மறைவதற்கு முன்பு மினாவிலிருந்து மக்கா சென்று தவாஃபுல் விதாஃவை செய்து விட்டு ஊருக்கு பயணமாகலாம் அப்படி சூரியன் மறைவதற்கு முன்பு மினாவிலிருந்து செல்லமுடியவில்லையென்றால் அடுத்தநாள் அங்கு தங்கவேண்டும் குறிப்பிடப்பட்ட (11,12,13)நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் : அல் குர்ஆன் 2:203.

நாள் : துல்ஹஜ் பிறை 13 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்

1-13 ஆம் நாள் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும்

2-மினாவிலிருந்து மக்கா செல்லுதல்

3-தவாஃபுல் விதா செய்தல் இது வாஜிபாகும் இதை விட்டால் பலி கொடுக்கவேண்டும் ஆனால் மாதவிடாய் மற்றும் பேற்றுத் தொடக்குள்ள பெண்களுக்கு இது வாஜிபல்ல பிறகு மக்காவிலிருந்து பயணமாகலாம்.

குறிப்பு: ஹஜ்ஜின் நாட்களில் குர்ஆன் ஓதுதல் துஆ செய்தல் ஆகியவற்றிற்கான சந்தர்ப்பமான சூல் நிலை ஆகவே வீணான பேச்சுக்கள் தர்க்கங்கள் இவைகளிலிருந்து விடுபட்டு நல்லறங்களில் ஈடுபட வேண்டும் (அல் குர்ஆன் : 2:197)

ஹஜ்ஜின் ருக்னுகள் நான்கு (முதல் நிலைக்கடமைகள்)

1-இஹ்ராம் அணிதல் ( நிய்யத் செய்தல் ) இது ஹஜ்ஜின் காரியங்களில் நுழைவதற்கான நிய்யத்து

2-அரஃபாவில் தங்குவது

3-தவாஃபுல் இஃபாளா

4-ஸஃபா மர்வாவில் (ஓடுதல்) ஸயி செய்வது


மேற்கூறப்பட்ட ருக்னுகளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் அதைநிறைவேற்றும் வரை ஹஜ் நிறைவேறாது.

ஹஜ்ஜின் வாஜிபுகள் ஏழு ( இரண்டாம் நிலைக்கடமைகள்)

1-மீக்காத்தில் இஹ்ராம் அணிதல்

2-அரஃபாவில் சூரின் அஸ்தமிக்கும் வரை தங்குதல்

3-முஸ்தலிபாவில் இரவு தங்குதல்

4-மினாவில் இரவு தங்குதல்

5-பிறை 11, 12, 13, ஆம் நாள்களில் கல்லெறிதல்

6-தவாஃபுல் விதா செய்தல்

7-தலை மடியை மழித்தல் அல்லது குறைத்தல்

மேற்கூறப்பட்ட வாஜிபுகளளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் ஒரு பிராணியைப் பலியிட்டு (ஹரமிற்குள்) ஏழைகளுக்கு வழங்கவேண்டும் அவன் அதை சாப்பிடக்கூடாது


ஹஜ்ஜின் சுன்னத்துகள்

1-இஹ்ராமின் போது குளித்தல்

2-ஆண்கள் வெண்ணிறத்தில் இஹ்ராம் அணிதல்

3-தல்பியாவை உரத்து சொல்லுதல்

4-அரஃபா தின இரவில் மினாவில் தங்குதல்

5-ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுதல்

6-இள்திபா செய்தல் (ஆண்கள் (தவாஃப்செய்யும்போது) உம்ரா தவாஃபில் அல்லது தவாஃபுல் குதூமில் இஹ்ராம் ஆடையின் ஓர் ஓரத்தை வலது புற அக்குளுக்குக் கீழால் கொண்டு வந்து இடது தோளில் போடுவது)

7-உம்ரா தவாஃபில் அல்லது தவாஃபுல் குதூமில் மூன்று சுற்றுக்களில் சற்று விரைந்து செல்லல்.

8-ஹஜ் கிரான் மற்றும் இஃப்ராத் செய்பவர்கள் தவாஃபுல் குதூம் செய்தல் மேற்கூறப்பட்ட சுன்னத்துகளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் எந்த குற்றமுமில்லை


இஹ்ராமில் தடுக்கப்பட்டவைகள் பதினொன்று

1-முடியை வெட்டுவது

2-நகங்களைக் களைதல்

3-ஆண்கள் தலையை மறைத்தல்

4-ஆண்கள் தையாலடையை அணிதல்

5-வாசளைத் திரவியங்களை உபயோகித்தல்

6-பெண்கள் கையுறைகள் அணிதல்

7-பெண்கள் முகமூடி அணிதல்

- இந்த ஏழு காரியங்களில் ஏதேனும் ஒன்றை ஒருவன் மறந்தோ அறியாமலோ செய்தால் எந்தகுற்றமுமில்லை அல்லது வேண்டமென்றே செய்தல் அதற்கு பரிகாரம் கொடுக்கவேண்டும்,

8-தரைவாழ் விலங்குகளை வேட்டையாடுதல் அல்லது அதற்கு உதவுதல் அதை விரட்டுதல் இன்னம் கொலை செய்தல் இதை செய்தல் அதற்கு பரிராகரம் கொடுக்கவேண்டும்

9- மனைவியை இச்சையுடன் கட்டியணைத்தல் மருமஸ்த்தானம் அல்லாத பகுதிகளில் தொடுவது, முத்தமிடுவதைப்போல இதனால் விந்து வெளிப்பட்டால் ஹஜ்ஜிற்கு பாதகமில்லை ஆனால் ஓர் ஒட்டகத்தை அறுத்து பலியிட்டு பரிகாரம் செய்யவேண்டும்

10-தனக்காகவோ பிறருக்காகவோ திருமண ஒப்பந்தம் செய்தல் இதை செய்தால் பரிகரம் ஒன்றும் இல்லை

11- உடலுரவு கொள்ளல் இது முதல் விடுபடுதலுக்கு முன்பு நிகழிந்தால் ஹஜ் நிறைவேறாது மற்ற காரியங்களை முழுமைப்படுத்தி விட்டு அதற்குப் பகரமாக வரும் ஆண்டில் கட்டாயமாக ஹஜ்ஜை களா செய்ய வேண்டும் மேலும் ஓர் ஒட்டகத்தை பலியிடவேண்டும், உடலுரவு கொள்ளல் முதல் விடுபடுதலுக்குப் பின்பு நிகழ்ந்தால் ஹஜ் நிறைவேறிவிடும் ஆனால் ஓர் ஆட்டைப் பலியிடவேண்டும்


இஹ்ராம் கட்டவேண்டிய காலம்

துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளிலிருந்து தான் ஹஜ்ஜின் கிரியைகள் துவங்குகின்றன. என்றாலும்இ அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்.

'ஹஜ் என்பது (அனைவராலும்) அறியப்பட்ட சில மாதங்களாகும்.' (அல்குர்ஆன் 2:197)

எனவே ஷவ்வால் மாதத்திலோஇ துல்கஃதா மாதத்திலோ இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். ஷவ்வால் மாதமே இஹ்ராம் கட்டிவிட்டாலும், ஹஜ்ஜின் கிரியைகள் துல்ஹஜ் பிறை எட்டாம் நாளிலிருந்துதான் துவங்குவதால், அதுவரை அவர்கள் தவாஃப் செய்து கொண்டும் தொழுது கொண்டும் மக்காவிலேயே தங்கிக் கொள்ள வேண்டும்.

தவாஃப் செய்யும் முறை

கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். இந்த ஆரம்ப தவாஃப் செய்யும்போது மட்டும் முதல் மூன்று சுற்றுகள் ஓடியும் நான்கு சுற்றுகள் நடந்தும் நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ

இவ்வாறு தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக யஃலா முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, அபுதாவுத்)

கஃபாவின் ஒரு மூலையில் 'ஹஜ்ருல் அஸ்வத்' எனும் கறுப்புக்கல் பதிக்கப்பட்டுள்ளது. தவாஃப் செய்யும்போது ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையிலிருந்து துவக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத்திலிருந்து, ஹஜ்ருல் அஸ்வத் வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதீ

ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடுவது

ஒவ்வொரு சுற்றின்போதும் அந்தக் கல்லை அடைந்ததும் அதைத் தொட்டு முத்தமிடுவது நபிவழியாகும். நபி (ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது கையால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு, கையை முத்தமிட்டதை நான் பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தது முதல் அதை நான் விட்டதில்லை எனவும் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: நாபிவு. நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

கையால் அதைத் தொடமுடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கைத்தடி போன்றவற்றால் அதைத்தொட்டு அந்தக் கைத்தடியை முத்தமிட்டுக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கஃபாவை தவாஃப் செய்யும்போது தம்மிடமிருந்த கைத்தடியால் அதைத் தொட்டு கைத்தடியை முத்தமிட்டார்கள். அறிவிப்பவர் : ஆமிர் பின் வாஸிலா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபுதாவுத், இப்னுமாஜா

கைத்தடி போன்றவற்றால் கூட அதைத் தொட முடியாத அளவுக்கு நெருக்கம் அதிகமாக இருந்தால் நமது கையால் அதைத் தொடுவதுபோல் சைகை செய்துகொள்ளலாம்

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் தம் கையில் இருந்த ஏதோ ஒரு பொருளால் சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத்

ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது அது கடவுள் தன்மை கொண்டது என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது.

'நீ எந்த நன்மையும் தீமையும் செய்யமுடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்த்திருக்காவிட்டால் உன்னை முத்தமிட்டுருக்க மாட்டேன்' என்று உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது கூறினார்கள். நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

ஹிஜ்ரையும் சேர்த்து சுற்றவேண்டும் கஃபா ஆலயம் செவ்வகமாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். அதன் ஒரு பகுதியில் அரைவட்டமான ஒரு பகுதியும் அமைந்திருக்கும். அதுவும் கஃபாவைச் சேர்ந்ததாகும். நபி (ஸல்) அவர்களின் இளமைப்பருவத்தில் கஃபாவை புணர் நிர்மாணம் செய்தபோது பொருள்வசதி போதாமல் சதுரமாகக் கட்டிவிட்டனர்

ஹிஜ்ர் எனப்படும் இந்தப் பகுதியும் கஃபாவில் கட்டுப்பட்டுள்ளதால் அதையும் உள்ளடக்கும் வகையில் தவாப் செய்வது அவசியம்.

நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்தனர். 'ஆலயத்தின் உள்ளே தொழ விரும்பினால் இங்கே தொழுவீராக! ஏனெனில் இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டியபோது அதைச் சுருக்கிவிட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்திவிட்டனர்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : திர்மிதீஇ அபுதாவுத்இ நஸயீ



ருக்னுல் யமானியை முத்தமிடுதல்

கஃபாவுக்கு நான்கு மூலைகள் இருப்பதை நாம் அறிவோம். ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மற்றொரு மூன்றாவது மூலை ருக்னுல் யமானி என்று கூறப்படுகிறது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிடுவது நபி வழியாகும்.

நபி (ஸல்) அவர்கள்இ நான்கு மூலைகளில் 'யமானி' எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா

தவாஃப் செய்யும்போது 'உலூ' அவசியம்

தொழுவதற்கு எப்படி உலூ அவசியமோ அதுபோல் தவாஃப் செய்வதற்கும் உலூ அவசியமாகும். தூய்மையற்ற நிலையில் தவாஃப் செய்யக்கூடாது.

'நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்த முதல் வேலை உலூ செய்துவிட்டு கஃபாவை தவாஃப் செய்ததுதான்' அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது தவாஃப் தவிர மற்ற ஹஜ் கிரியைகள் அனைத்தையும் செய்யுமாறு நபி (ஸல்) கூறியுள்ளனர். (புகாரி, முஸ்லிம்) மாதவிலக்கு நிற்கும் வரை தவாஃப் செய்யக்கூடாது என்பதிலிருந்து தூய்மையின் அவசியத்தை உணரலாம்.

தவாஃப் செய்யும்போது கூறவேண்டியவை

தவாஃப் செய்யும்போது கூறவேண்டிய துஆக்களையும் அறிந்து கொள்ளவேண்டும். ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வத்துக்கும் இடையே 'ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' என்று நபி (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸாயீப் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், நஸயீ, ஹாகீம்

'கஃபாவை தவாஃப் செய்வது ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடுவது, கல்லெறிவது ஆகியவை அல்லாஹ்வின் நினைவை நிலை நாட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்று நபி (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், திர்மிதீ

இறைவனை நினைவு கூறும் விதமாகவும் அவனைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் தவாஃபின்போது நடந்து கொள்ள வேண்டும். 'அல்லாஹ் அக்பர்' போன்ற வார்த்தைகளைக் கூறிக்கொள்ளலாம் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால்

தவாஃப் செய்ய இயலாதவர்கள் வாகனத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்யலாம். இவ்வாறு செய்பவர்கள் நடந்து தவாஃப் செய்பவர்களுக்குப் பின்னால் தான் தவாஃப் செய்ய வேண்டும். நான் நோயுற்ற நிலையில் (மக்காவுக்கு) வந்தேன். நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றிக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'மக்களுக்குப் பின்னால் வாகனத்திலிருந்தவாறே தவாஃப் செய்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மூ ஸலமா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா.

தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம்

தவாஃப் செய்து முடித்தவுடன் 'மகாமே இப்ராஹீம்' என்ற இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம். இலட்சக்கணக்கான மக்கள் கூடும்போது அந்த இடத்தில் தொழுவது அனைவருக்கும் சாத்தியமாகாது. அவ்வாறு சாத்தியப்பட விட்டால் கஃபாவின் எந்தத் திசையில் வேண்டுமானாலும் தொழலாம். ஏனெனில்இ எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் சிரமப்படுத்தமாட்டான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் தவாஃபை முடித்துவிட்டு 'மகாமே இப்ராஹீம்' என்ற இடத்தை அடைந்தபோது 'மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்' என்ற வசனத்தை ஓதினார்கள். அப்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் அல்ஹம்து சூராவையும்இ குல்யாஅய்யுஹல் காபிரூன் சூராவையும்இ குல்ஹுவல்லாஹ் அஹத் சூராவையும் ஓதினார்கள். பின்னர் திரும்பவும் ஹஜருல் அஸ்வதுக்குச் சென்று அதைத் தொட்டு (முத்தமிட்டார்கள்) பிறகு ஸபாவுக்குச் சென்றார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ

ஒவ்வொரு தவாஃப்க்குப் பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும். ஒவ்வொரு ஏழு சுற்றுகளுக்குப் பிறகும் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை. அறிவிப்பவர் : ஸுஹ்ரீ நூல் : புகாரி

ஸயி செய்யும் முறை

ஸஃபா மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது ஸஃபா மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓடவேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது தவாஃபை நிறைவேற்றிஇ இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு 'ஸஃபா'வுக்கு வந்து அதன் மேல் ஏறினார்கள். அங்கிருந்து கஃபாவைப் பார்த்து தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அவர்கள் பிரார்த்திக்க நினைத்ததெல்லாம் பிரார்த்தித்தார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத்

ஸஃபா மர்வாவுக்கு இடையே ஓடுவதற்கு முன்னால் 'ஸஃபா'வில் நமது தேவைகளை இறைவனிடம் கேட்டு துஆ செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஸபாபை அடைந்ததும் 'நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்' என்ற வசனத்தை ஓதினார்கள். 'அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக' என்று கூறிவிட்டு ஸபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன்மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி 'லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா. அன்ஜஸ வஃதா. வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா' என்று கூறி இறைவனைப் பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சமதரைக்கு வந்ததும்) 'பதனுல் வாதீ' என்ற இடத்தில் ஓடினார்கள். (தற்போது பச்சை(டியூப்) விளக்கு போடப்பட்டுள்ளது அந்த பச்சைவிளக்கு இடம் வந்ததும் ஓடவேண்டும் பச்சைவிளக்கு முடிந்ததும் நடந்துசெல்லவேண்டும்) (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும்வரை நடந்தார்கள். ஸபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ


ஓட வேண்டிய பகுதி பச்சை விளக்குகளால் குறியிடப்பட்டுள்ளது.

ஸபாவில் செய்ததுபோலவே மர்வாவிலும் நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்து கொள்ள வேண்டும். ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவது 'ஸஃயு' என்று கூறப்படுகின்றது. இவ்வாறு ஸஃயு செய்யும்போது மூன்று தடவை ஓட்டமாகவும், நான்கு தடவை நடந்து செல்ல வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள். ஸஃயும் செய்தார்கள். (அப்போது) மூன்று தடவை ஓடியும், நான்கு தடவை நடந்தும் சென்றார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : நஸயீ

ஏழுதடவை ஸஃயு செய்யவேண்டும். ஸபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று. மர்வாவிலிருந்து ஸபாவுக்கு வருவது மற்றொன்று என்பதாகும்.

'நபி (ஸல்) அவர்கள் ஏழுதடவை ஸஃயு செய்தார்கள். ஸபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.' அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்

புதன், 19 ஆகஸ்ட், 2015

முகமன் (ஸலாம்) கூறுவதன் முக்கியத்துவம்


هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَـبَّارُ الْمُتَكَبِّرُ‌ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ‏

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை. அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்;. சாந்தியளிப்பவன் தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். (59:23)

மேலே கண்ட வசனத்தில் அஸ்ஸலாம் என்ற சொல்லானது, இறைவனது திருப்பெயர்களில் ஒன்றாக இருக்கின்றது. எனவே, இங்கு அந்த அஸ்ஸலாம் என்ற சொல்லினுடைய அர்த்தம் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி நாம் இங்கு காணவிருக்கின்றோம்.

இஸ்லாம் இந்த மண்ணில் தோன்றுவதற்கு முன்னாள், அந்த பாலைப் பெருவெளியில் வாழ்ந்த அந்த அரபுக்கள் ஒருவர் மற்றவருக்கு முகமன் (ஸலாம்) கூறும் போது, ஹய்யாக்கல்லாஹ் - இறைவன் உங்களுக்கு ஆயுளை நீட்டித்தருள்வானாக! என்று கூறுவார்களாம். ஆனால் இஸ்லாம் அதனை விட வித்தியாசமான முறையில், அஸ்ஸலாமு அலைக்கும்! என்ற வார்த்தையை முஸ்லிம்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றது. இதனுடைய அர்த்தம் என்னவென்றால், உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக! இதனை இன்னுமொரு வார்த்தையில் சொல்வதென்றால், அனைத்து வித கஷ்டங்கள் மற்றும் துன்பங்களை விட்டும் நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்களாக!

திருமறைக் குர்ஆன் விரிவுரையாளராகிய இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் தன்னுடைய அஹ்காமுல் குர்ஆனில், அஸ்ஸலாம் என்பது அல்லாஹ்வினுடைய ஒரு பண்புப் பெயராகவும் இருக்கின்றது, (அல்லாஹு ரகீபுன் அலைக்கும்) அதாவது, அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலனாகவும் இருக்கின்றான்.

இன்றைக்கு உலக மொழிகளில் வழக்கில் இருக்கின்ற அனைத்து வித முகமன்களிலும், இஸ்லாம் கற்றுக் கொடுத்திருக்கின்ற அஸ்ஸலாமு அலைக்கும் என்ற முகமன் மிகவும் வித்தியாசமானதொன்றாக இருந்து கொண்டிருக்கின்றது.

மற்ற சமுதாயங்கள் தங்களது அன்பை வெளிப்படுத்துவதற்காக உபயோக்கின்ற வார்த்தைகளை விட, இஸ்லாம் கற்றுத் தந்திருக்கின்ற அந்த வாசகங்கள் தர்க்கம் மற்றும் காரண காரிய அடிப்படையில் மிகவும் சிறந்ததொரு பிரார்த்தனையாக அமைந்திருக்கின்றது. அந்தப் பிரார்த்தனையின் மூலமாக, மற்றவருக்கு அன்பை வெளிப்படுத்திக் காட்டுவதோடு, அவரைச் சூழ்ந்திருக்கும் அனைத்து வித துன்பங்கள், துயரங்கள், இழப்புகள் ஆகியவற்றிலிருந்தும் அவரைப் பாதுகாத்தருளும்படி, தன்னைப் படைத்த இறைவனிடம் பிரார்த்தனை புரிகின்றார் என்பதைக் குறிக்கின்றது. அன்றைய அரபுக்கள் மாற்றாருக்கு வாழ்வை மட்டும் வழங்குமாறு தான் பிரார்த்தித்தார்கள், ஆனால் இஸ்லாம் கற்றுத் தந்திருக்கின்ற அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வாசகமோ, அவரை அனைத்து வித நலன்களும் சூழ்ந்திருக்கப் பிரார்த்திக்கக் கற்றுத் தந்திருக்கின்றது.

மேலும், நாம் அனைவரும் அல்லாஹ்வினுடைய அருளை நம்பி வாழ்பவர்கள் என்பதையும், இன்னும் அவனையன்றி யாரும் நமக்குத் தீங்கிழைத்து விட முடியாது என்பதையும் நமக்கு ஞாபகமூட்டிக் கொண்டிருக்கின்றது. இன்னும் இதுவும் ஒரு வகையில், வணக்க வழிபாடாகவும் இருக்கின்றது அல்லது தன்னைச் சூழ உள்ள முஸ்லிம்களுக்கு இறைவனது ஞாபகத்தை ஊட்டக் கூடியதான வணக்கமாகவும் இருக்கின்றது.

இன்னும் ஒன்றை இங்கே நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளத்தக்கது என்னவென்றால், உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக என்று ஒருவர் உங்களை நோக்கி கூறுகின்றார் என்றால், அவர் உங்களுக்காக பிரார்த்தனை மட்டும் புரியவில்லை, மாறாக, என்னிடமிருந்து ஏற்படும் துன்பங்கள், துயரங்களிலிருந்தும், மற்றும் நாவிலிருந்தும், கரங்களிலிருந்தும் நீங்கள் பாதுகாப்புப் பெறுகின்றீர்கள் என்பதையும் அவர் பிரகடனப்படுத்துகின்றார் என்பதாகும். இதன் மூலம் உங்களது கௌரவம், வாழ்வு, மரியாதை ஆகியவற்றையும் அவர் கண்ணியப்படுத்துகின்றேன் என்றும் அவர் உங்களுக்கு அறிவிக்கின்றார் என்பதையும் குறிக்கின்றது.

இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் தன்னுடைய அஹ்காமில் குர்ஆனில்,

இஸ்லாம் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா? ஒருவர் உங்களுக்குச் ஸலாம் உரைப்பதன் மூலம், என்னிடமிருந்து ஏற்படும் தீங்குகளிலிருந்து நீங்கள் முழுவதும் பாதுகாப்புப் பெறுகின்றீர்கள் என்று உங்களுக்குச் ஸலாம் உரைக்கக் கூடியவர் அறிவிக்கின்ற அறிவிப்பாகும்.

இன்னும் ஸலாம் என்பது, அல்லாஹ்வை நினைவு கூரக் கூடியதாகவும், அல்லாஹ்வை நினைவுபடுத்தக் கூடியதாகவும், சக முஸ்லிம்களின் மீது அன்பு பாராட்டுவதாகவும், இன்னும் அது ஒரு மிகச் சிறந்த பிரார்த்தனையாகவும், இன்னும் முக்கியமாக ஒருவரது கரங்கள் மற்றும் நாவிலிருந்து ஏற்படும் தீங்குகளிலிருந்து பாதுகாப்பைப் பிரகடனப்படுத்தக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றது.

இதனை இறைத்தூதர் (ஸல்) அவர்களது பொன்மொழி ஒன்று இவ்வாறு மெய்ப்பித்துக் கூறுகின்றது :

தன்னுடைய சக முஸ்லிமுக்கு கரத்தாலும், நாவாலும் துன்பம் இழைக்காதவரே உண்மையான முஸ்லிமாவார்.

இந்த ஒரு ஹதீஸை மட்டும் நாம் கவனத்தில் கொள்வோமானால், இன்றைக்கு முழு உலகில் வாழக் கூடிய முஸ்லிம்களுக்கிடையே ஏற்பட்டிருக்கின்ற பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு விடலாம். எனவே தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கிடையில் ஸலாமைப் பரப்பிக் கொள்ளுங்கள் என்று, தன்னைப் பின்பற்றுகின்ற சமுதாயத்தினரை வேண்டியதோடு மட்டுமல்லாமல், மிகச் சிறந்த நல்லமல்களில் மிகச் சிறந்ததொன்றாக ஸலாம் இருக்கின்றது என்பதனையும் குறிப்பிட்டுக் கூறிச் சென்றுள்ளார்கள்.

இன்னும் ஏராளமாக நபிமொழிகள், இந்த ஸலாத்தின் முக்கியத்துவத்தை நமக்கு விளக்கப்படுத்தி இருக்கின்றன.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

நீங்கள் நம்பிக்கைளாராக ஆகாதவரை சொர்க்கத்தில் பிரவேசிக்க முடியாது. உங்களில் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை நீங்கள் முழுமையான (பூரணமான) நம்பிக்கையாளராக ஆக முடியாது. உங்களுக்கு ஒன்றை நான் ஏவுவதாக இருந்தால், உங்களுக்கிடையில் ஸலாத்தை பரப்பவும், இன்னும் அன்பு செலுத்தும்படியும் தான் நான் கூறுவேன். ஸலாத்தைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவருக்கு முகமன் கூறுங்கள், நீங்கள் ஸலாம் உரைக்கக் கூடிய நபர் அறிந்தவராகவோ அல்லது அறியாதவராகவே இருப்பினும் சரியே!

ஒரு மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதாக, அப்துல் இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள் :

இஸ்லாத்தில் மிகச் சிறந்த நற்செயல் எது? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலிறுத்தார்கள். மக்களுக்கு உணவளியுங்கள், இன்னும் உங்களில் அறிந்தவருக்கும் இன்னும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுங்கள் என்றார்கள்.

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

இறைவனுக்கு மிக நெருக்கமானவர் யாரென்றால், உங்களில் யார் முதலில் ஸலாம் கூறுகின்றவரே இறைவனுக்கு மிக நெருக்கமானவர் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்துல்லா இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

ஸலாம் என்பது அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்றாக இருக்கின்றது, அதனை இறைவன் இந்தப் பூமியின் மீது இறக்கி வைத்தான். எனவே, அந்த ஸலாத்தை நாம் இந்தப் பூமியில் பரப்ப வேண்டும். ஒருவர் மற்றவருக்கு ஸலாம் உரைக்கும் பொழுது, இறைவனிடத்தில் அவரது தகுதி உயர்த்தப்படுகின்றது. சபையில் உள்ளவர்கள் ஸலாம் உரைப்பவரது ஸலாத்திற்குப் பதிலுரைக்கவில்லை என்று சொன்னால், அங்கிருக்கின்ற மனிதர்களை விட மிகச் சிறந்த படைப்பான (மலக்குமார்கள் - வானவர்கள்) அவரது ஸலாத்திற்குப் பதில் கூறுகின்றார்கள். (முஸ்னது பஸ்ஸார், தப்ரானி)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்ததாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

உங்களில் கஞ்சத்தனமிக்கவர் யாரென்றால், ஸலாத்தைப் பரப்பாமல் கஞ்சத்தனம் செய்கின்றவரே!

திருமறைக் குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகின்றான் :

وَاِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ حَسِيْبًا‏ 
உங்களுக்கு ஸலாம் (முகமன்) கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் (முகமன்) கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

 (4:86)

மேலே உள்ள வசனத்தின்படி, ஒருவர் உங்களுக்கு ஸலாம் உரைப்பாரேயானால், அவருக்கு அதைப் போன்ற அல்லது அதனை விடச் சிறப்பான முறையில் பதில் கூறுங்கள் என்று இறைவன் நமக்கு அறிவுறுத்துகின்றான். இப்னு ஜரீர் மற்றும் இப்னு ஹாத்திம் - ல் இது பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நடைமுறை, நாம் எவ்வாறு பதில் கூற வேண்டும் என்பதை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றது.

ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுடன் அமர்ந்திருக்கும் பொழுது, அங்கு வந்த ஒரு மனிதர் அஸ்ஸலாமு அலைக்கும் என்று ஸலாம் கூறினார். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் என்று பதில் கூறினார்கள். இரண்டாவதாக வந்த ஒரு மனிதர் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் என்று கூற, அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். அவரை அடுத்த வந்த ஒரு மனிதர் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு என்று கூறினார், அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வ அலைக்க என்று கூறினார்கள்.

அப்போது மூன்றாவதாக வந்த அந்த மனிதர் கேட்டார், இறைத்தூதர் (ஸல்) அவர்களே, இதற்கு முன் வந்தவர்கள் சுருக்கமாக ஸலாம் கூறினார்கள் நீங்கள் அதற்கு விரிவாகப் பதில் கூறினீர்கள். ஆனால் அவர்களைக் காட்டிலும் விரிவாக ஸலாம் கூறினேன், ஆச்சரியம் என்னவென்றால், நீங்கள் அதற்கு மிகச் சுருக்கமாக வ அலைக்க என்று பதில் கூறினீர்களே! என்றார்.

நீங்கள் கூறியதை விட மிகச் சிறப்பாக நான் கூறுவதற்கு நீங்கள் எதனையும் விட்டு வைக்கவில்லை. எனவே தான் நீங்கள் கூறியவாறே, நானும் பதில் கூறி, அல்லாஹ் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் விதித்துள்ள நிபந்தனைகளை நான் பூர்த்தி செய்தேன் என்று பதில் கூறினார்கள்.

எனவே, ஒருவர் ஸலாம் கூறினால், அதற்கு மூன்று விதமாக நாம் பதில் கூறலாம் என்பதை நாம் அறிய முடிகின்றது. மேலும், ஸலாம் என்பதும், அதற்கான பதில் என்பதும் மிகவும் சுருக்கமானதாகவும், இன்னும் மிக நீண்ட உரைகளைப் போன்றல்லாமலும், இருக்க வேண்டும் என்பதையும் இது நமக்கு உணர்த்துகின்றது.

ஒருவர் மற்றவருக்கு ஸலாம் சொல்வது என்பது சடங்கு போலப் பின்பற்றப்படுவது அல்ல. மாறாக, அது இயல்பாகவும், வழக்கமானதொன்றாகவும் பின்பற்றபடவும், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது பின்பற்றப்பட வேண்டியதுமாகும். இதில் யார் முதன் முதலில் ஸலாத்தை உரைக்கின்றாரோ, அவரே இறைவனுக்கு மிகவும் நெருக்கமான அடியார் என்பதையும் நாம் உணர்ந்து, பிறருக்கு ஸலாம் உரைப்பதற்கு முந்திக் கொண்டு, இறைவனது நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஹஸன் பஷரி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் :

ஸலாம் சொல்வது இயல்பாக தானே முன்வந்து உரைக்கக் கூடியது, அதற்குப் பதிலுரைப்பது கடமையானதாகும்.

துஃபைல் பின் அபீ பின் காப் அவர்கள் அறிவித்ததாக இமாம் மாலிக் அவர்களின் முஅத்தா வில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது,

அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள், எந்தவித பொருள்களும் வாங்கவோ அல்லது விற்கும் நோக்கமின்றி, மக்களுக்கு ஸலாம் சொல்வதற்கென்றே கடைத் தெருப்பக்கம் வரக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இதன் மூலம் மக்களுக்கு முந்திக் கொண்டு ஸலாம் சொல்வதன் சிறப்புப் பற்றி அவர்கள் அறிந்து, அவர்கள் அதற்கு அளித்திருக்கக் கூடிய முக்கியத்துவத்தை நாம் உணர முடிகின்றது.

அல்லாஹ் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் சூரா அந்நிஸாவின் 86வது வசனத்தின் இறுதிப் பகுதி இதற்கான விளக்கத்தை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் கணக்குப் பார்க்கிறவனாக இருக்கின்றான். (4:86)

ஒருவருக்கு ஸலாம் உரைப்பதும், அதற்குப் பதில் சொல்வதும் சிறப்பானது தான் எனினும், ஸலாம் சொல்வதற்கு முந்திக் கொள்வது சிறப்பானதாகும். ஸலாம் சொன்னவர்களுக்கு சிறப்பான முறையில் பதில் அளிப்பதன் மூலம், நமக்கிடையே அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், ஸலாத்தின் முக்கியத்துவம் குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களது வழிகாட்டுதல்கள் :

1- வாகனத்தில் அமர்ந்திருப்பவர் நடந்து செல்பவர்களுக்குச் ஸலாம் சொல்ல வேண்டும்

2- நடந்து சென்று கொண்டிருப்பவர் உட்கார்ந்திருப்பவர்களுக்கு ஸலாம் சொல்ல வேண்டும்

3- சிறிய குழுக்கள் பெரிய குழுக்களுக்கும்

4- விடைபெற்றுச் செல்பவர் தங்கி இருந்து கொண்டிருப்பவர்களுக்கும்

5- வீட்டை விட்டுக் கிளம்பும் பொழுதும், வீட்டினுள் நுழையும் போதும் அங்கு எவரும் இல்லையெனினும் ஸலாம் சொல்வது (வானவர்கள் உங்களது ஸலாத்திற்குப் பதிலுரைப்பார்கள்)

6- உங்களது சந்திப்பு மீண்டும் மீண்டும் தொடர்ந்தாலும், மீண்டும் மீண்டும் ஸலாம் சொல்லுங்கள்

ஸலாத்திற்கு பதில் உரைக்க அவசியமில்லாத நேரங்கள் :

1- தொழுது கொண்டிருப்பவர், ஸலாத்திற்குப் பதில் கூறுவது அனுமதிக்கப்பட்டதல்ல

2- கழிப்பிடத்தில் அமர்ந்திருப்பவரும் ஸலாத்திற்குப் பதிலுரைக்க வேண்டியதில்லை.

மேலும் அல்லாஹ், ஸலாம் சொல்வதன் முக்கியத்துவம் பற்றிக் கூறும் பொழுது,

மேலும், நம்முடைய வசனங்களை விசுவாசித்தோர் (நபியே!) உம்மிடம் வந்தால், (நீர் அவர்களுக்கு ஸலாமுன் அலைக்கும்) - உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! உங்களுடைய இரட்சகன் (உங்களுக்கு) அருள் புரிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக (யாதொரு) தீமையைச் செய்து விட்டு, பிறகு அதன் பின்னர் அதற்காகப் பச்சாதபப்பட்டு (அதிலிருந்து விலகி) சீர்திருத்திக் கொண்டாரோ (அவருடைய குற்றங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான் ஏனென்றால்,) நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபையுடையவன், என்று நீர் கூறுவீராக! (6:54).

மேற்கண்ட வசனத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் எப்பொழுதும் உடனிருந்து கொண்டிருந்த தோழர்களைக் கௌரவிக்கும் முகமாக, அது பற்றி விளக்குகின்றான். என்னவென்றால், மக்காவின் மிகப் பணக்கார முஸ்லிமல்லாதவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருக்க விரும்பி, அவரிடமிருந்து கொண்டிருந்த அந்த ஏழைத் தோழர்களை விலகிச் செல்ல வேண்டும் என்று விரும்பினார்கள்.

ஆனால் அல்லாஹ் தன்னுடைய நபிக்கு இவ்வாறு அறிவுறுத்துகின்றான். உங்களுடன் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கின்ற இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த ஏழைத் தோழர்களுக்கு என்னுடைய ஸலாத்தைக் கூறுங்கள். அவர்களது வருகை நல்வரவு ஆகட்டும் என்று நீங்கள் அவர்களுக்குச் சொல்லுங்கள். அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுங்கள் என்று கூறுவதன் கருத்து இருவிதமானதாகும்.

முதலாவது, இறைவன் தன்னுடைய ஸலாத்தை அந்த ஏழைத்தோழர்களுக்குத் தெரிவிக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குக் கூறுகின்றான். இந்த ஸலாமானது அவர்களுக்கு, நேர்மையான முறையில் இஸ்லாத்தைப் பின்பற்றியொழுகுகின்ற அந்த ஏழைகளுக்கு இறைவன் கொடுத்த கௌரவமாகும். இது அவர்களுடைய இதயத்தைப் பலப்படுத்துகின்றது, இன்னும் அவர்களது ஆன்மீகத் தேட்டத்தை அதிகரிக்கின்றது.

இரண்டாவதாக, இறைவனது அனுமதி கொண்டு அவர்கள் மிகவும் சாந்தியும், சமாதானத்துடனும் நிம்மதியாகவும் வாழ்வதோடு, இன்னும் அவர்கள் செய்கின்ற சிறு சிறு பாவங்களை மன்னிக்கப்படக் கூடியதாகவும் இருக்கின்றது என்று இறைவன் அவர்களுக்கு இதன் மூலம் நற்செய்தியையும் வழங்குகின்றான்.

எனவே, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸலாத்தினைப் பரப்பி, உலகம் சுபிட்சமான அமைதியான, சாந்திமயமிக்கதாக மாற்றியமைப்பதற்கு நாம் அனைவரும் முன்வருவோமாக! அதற்கான தகுதியை இறைவன் நம் அனைவருக்கும் வழங்கியருள்வானாக! ஆமீன்!! 

ஞாயிறு, 5 ஜூலை, 2015

திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு :

2:185   شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ  ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

திருக்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவதற்கு முயற்சி செய்யுங்கள். குறிப்பாக இந்தப் புனிதமிகு ரமளான் மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. இந்த மாதத்தில் திருக்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவது சிறப்பிற்குரியது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு தடவை ஓதிக்காட்ட நபியவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் எந்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்களோ, அந்த ஆண்டு - மனதில் நன்கு பதிய வைப்பதற்காகவும், உறுதிப்படுத்து வதற்காகவும் - இரண்டு தடவை ஓதிக் காட்டினார்கள்.

நல்லோர்களான நம்முன்னோர்கள் ரமளான் மாதத்தில் தொழுகையிலும், வெளியிலும் குர்ஆனை அதிகமதிகம் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது தன்னை ஓதக் கூடிய வர்களுக்கு மறுமை நாளில் பரிந்துரை செய்யக் கூடியதாக வரும். (முஸ்லிம்)

எந்த ஒரு குழுவினர் அல்லாஹ்வுடைய பள்ளிவாசலில் ஒன்று கூடி குர்ஆனை ஓதுகிறார்களோ மேலும் தங்களுக்கிடையே அதனை ஆய்வு செய்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயம் அமைதி இறங்குகிறது. அவர்களைக் கருணை சூழ்கிறது. மேலும் அவர்களை மலக்குகள் வளைந்து கொள்கிறார்கள். மேலும் அல்லாஹ் அவர்களைப் பற்றி - தன்னிடம் உள்ளவர்களிடம் எடுத்துரைக்கின்றான். (முஸ்லிம்)

குர்ஆனைத் தொடர்ந்து ஓதி வாருங்கள். எனது உயிர் யார் கை வசம் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! இந்தக் குர்ஆன் (தொழுவத்தில்) கட்டப்பட்டுள்ள ஒட்டகத்தை விட வேகமாக பிய்த்துக் கொண்டு ஓடக் கூடியதாக இருக்கிறது. (புகாரி)

உங்களில் எவரும் இந்த ஆயத் - வசனத்தை நான் மறந்து விட்டேன் எனறு சொல்ல வேண்டாம். உண்மையில் அவர் தான் மறக்கடிக்கப்பட்டார் (முஸ்லிம்)

நான் மறந்து விட்டேன் என்பதன் காரணம், குர்ஆனில் அவர் மனனம் செய்திருந்தவை குறித்து அவர் பொடுபோக்காக இருந்து விட்டார். அதை மறந்து விடும் அளவுக்கு அவர் அலட்சியத்துடன் இருந்திருக்கின்றார் என்பதையும் காட்டுகின்றது. அதாவது குர்ஆனுக்கும் அவருக்கும் தொடர்பின்மையைக் காட்டுகின்றது.

நிச்சயமாக இநதக் குர்ஆன் அல்லாஹ்வின் விருந்துபச்சாரமாகும். அவனது விருந்துபச்சாரத்தை ஏற்றுக் கொள்;;; ளுங்கள். திண்ணமாக இந்தக் குர்ஆன் அல்லாஹ்வின் உறுதியான கயிறு, தெளிவான ஒளி, பயனுள்ள நிவாவரணியாகும். இந்தக் குர்ஆனை யார் பற்றிப் பிடித்து நிற்கிறாரோ அவருக்குப் பாதுகாப்பாகவும், அதைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கு ஈடேற்றமாகவும் திகழ்கிறது. அதை ஓதுவதன் மூலம் ஒன்றுக்கு பத்து நன்மை என இறைவன் கூலி வழங்குவான். அல்லாஹ்விடம் கூலியையும் அவனது உவப்பையும் எதிர்பார்த்து யார் ஓதினாலும் அவர்களின் கூலி குறையாது. குறைவான அமல்களுக்கு ஏராளமான கூலிகள். நிவர்த்தி செய்ய முடியாத அந்த மறுமை நாளில் லாபம் ஈட்டி டத் தவறியவன் யாரோ அவன் தான் நஷ்டம் அடைந்தவன்.

பகல்-இரவு எல்லா நேரங்களிலும் எந்த அமல்கள் இறைவனாடு உங்களுக்க நெருக்கத்தை ஏற்படுத்துமோ அந்த அமல்களைச் செய்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதுங்கள். ஆயுட்காலம் வேகமாகச் சுருட்டப்படுகின்றது. காலங்கள் அனைத்தும் எவ்வாறு கழிந்து செல்கிறதெனில் பகலின் சில மணி நேரங்கள் கழிந்தது போன்றே தோன்றுகின்றது.

யா அல்லாஹ்! உனது வேதத்தை உனக்குத் திருப்தி அளிக்கும் வகையில் ஓதுகின்ற பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! அதன் மூலம் எங்களை ஈடேற்றப் பாதை யில் செலுத்துவாயாக! இருள்களிலிருந்து எங்களை வெளி யேற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வருவாயாக! மேலும் குர்ஆனை எங்களுக்குப் பாதகமாக அன்றி சாதகமாக ஆக்குவாயாக! அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனே!

யா அல்லாஹ்! இந்தக் குர்ஆன் மூலம் எங்களது அந்தஸ்தை உயர்த்துவயாக! மேலும் இதன் மூலம் எங்களை விட்டும் தீமைகளைப் போக்குவாயாக! உனது கருணையினால் எங்களுக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும், கருணையாளர்களில் எல்லாம் கருணையாளனே!  பாவமன்னிப்பும் வழங்குவாயாக!

யா அல்லாஹ்! எங்களுடைய நோன்புகளைப் பாதுகாப்பாயாக! எங்களுக்குப் பரிந்துரை செய்யக் கூடியதாக அவற்றை ஆக்கியருள்வாயாக! மேலும் எங்கள் பாவங்களையும், எங்கள் பெற்றோர் பாவங்களையம் அனைத்து முஸ்லிம்களின் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக!