துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

ஞாயிறு, 25 நவம்பர், 2012

வெந்தயத்தில் மருத்துவம்.


உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடுஇ அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும்இ வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்துஇ 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வரஇ உடல் சூடுஇ மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.
தவிரஇ உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டுஇ வாணலியில் போட்டு வறுத்துஇ ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோஃமோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன்இ சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள்இ அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்ஃமோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால்இ சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில்இ வெந்தயம் – பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.
மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால்இ வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும்இ வெந்தயப் பொடியையும்இ பெருங்காயப் பொடியையும் சேர்க்கஇ சுவை கூடுவதுடன்இ உடல் உபாதைகளையும் போக்கும்.
இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில்இ வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால்இ சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால்இ நீரிழிவுஇ வயிற்றுப்புண்இ வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
1. இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுல பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்.
2. வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்) குறையும்.
3. வெந்தயம் 20 கிராம் எடுத்து 350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைச்சு சாப்பிட இரத்தம் ஊறும்.
4. கஞ்சியில் வெந்தயத்த சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
5. வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவச்சு நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்க முடி உதிராம நல்லா வளரும்.
6. 5 கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் கடஞ்சு கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.
7. வெந்தயம்இ கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.
8. வெந்தயம்இ கடுகுஇ பெருங்காயம்இ கறிமஞ்சள் சமமா எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி சாப்பிட்டில் கலந்து சாப்பிட வயிற்றுவலிஇ பொருமல்இ ஈரல வீக்கம் குறையும்.
9. வெந்தயம்இ வாதுமைப் பருப்புஇ கசகசாஇ உடைத்த கோதுமைஇ நெய்இ பால்இ சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாவும்இ வலுவாவும் இருக்கும். இடுப்பு வலி தீரும்.
10. வெந்தயத்த சீமை அத்திப்பழம் சேர்த்து அரைச்சு கட்டிகளுக்குப் பத்துபோட்டா கட்டி உடையும். படைகளுக்கும் பூசலாம்.
11. வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேல பூச எரிச்சல் குறையும்.
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.
ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.
 வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சலி தணிந்து ஆறும்.
வெந்தியப்பொடியை ஒரு தேக்கரண்டியாக்க் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.
வெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.
இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்துஇ அதிகாலை வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீர்ழிவு நோய் சிறிது சிறிதாக வீரியம் குறையும்.
தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது.
முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடுசெர்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலை முழுகினால் பலன் கிட்டும்.
முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.
வெந்தயக்கீரை.
வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.
வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கிஇ இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுஇஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சிஇ காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.
வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தாலகு உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும்இ உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.
வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கிஇ கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டிஇ எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும். இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்துஇ ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.
வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது.  வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு செர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது  வாய்ங்குவேக்காடு வராது.
வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.
வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும்இ சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்புஇ கண்பார்வை குறைஇ வாதம்இ சொறி சிரங்குஇ இரத்தசோகை ஆகியவை குணமடையவும்இஇ பசியைப்போக்கவும் பயன்படுகிறது.
பிரிஸ்பன்: வெந்தயம்இ ஆண் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வத்தக்குழம்பில் ஆரம்பித்து ஊறுகாய்இ மிளகாய் பொடிஇ மசாலா பொடி என பல வகையான இந்திய உணவுகளிலும் பயன்படுவது வெந்தயம். சித்த மருத்துவத்தில் பல்வேறு வகையான நோய்களுக்கும் இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. உடல் சூடு. வயிற்று புண். வாய்ப்புண் ஆகியவற்றை வெந்தயம் கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்கும் மருந்தாக வெந்தய பவுடர் பயன்படுத்தப்படுகிறது. 
வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்இ ஆண் ஹார்மோன் உற்பத்தியில் வெந்தயத்தின் பங்கு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. நல்ல உடல்நலத்துடன் இருக்கும் 25ரூ52 வயதினர் 60 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். தினமும் 2 வேளை என ஒன்றரை மாதத்துக்கு அவர்களுக்கு வெந்தய சாறு கொடுக்கப்பட்டது. அவர்களது ஹார்மோன் அளவுஇ செக்ஸ் ஆர்வத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. இன்னொரு குரூப்புக்கு டம்மி சாறு கொடுக்கப்பட்டது.
வெந்தய சாறு கொடுத்தவர்களின் ஹார்மோன் அளவு 28 சதவீதம் உயர்ந்துள்ளது. வெந்தயத்தில் உள்ள சபோனின் பொருள்இ ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. உணவில் போதுமான அளவு வெந்தயம் சேர்த்துக் கொண்டால் செக்ஸ் வாழ்க்கை முழு மகிழ்ச்சியுடன் இருக்கும் என்கிறது ஆய்வு

நன்றி தமிழ் முஸ்லிம் சகோதரர்கள்

திங்கள், 19 நவம்பர், 2012

முஹர்ரம்


நபி (ஸல்)அவர்கள் காலத்திற்கு முன்பிருந்தே இம்மாதத்திற்கென தனிச்சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது இந்நாளில் யாரும் போர் புரிவதில்லை. இந்நாளில்தான் மூஸா (அலை) அவர்களையும், அவர்களது மக்களையும் ஃபிர்அவ்னிடமிருந்து இறைவன் ஈடேற்றம் பெறச்செய்தான்,

நபி (ஸல்) அவர்களின் சொல்படி முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10ம்நாளில் நோன்பு நோற்பது சுன்னத்து, இந்நாளில் நோன்பு வைப்பது சென்ற ஆண்டில் செய்துவிட்ட சிறிய பாவங்களை போக்கிவிடும் என நபி (ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள்.

புதன், 7 நவம்பர், 2012

இன்றைக்கும் ஹிஜ்ரத்கள் உண்டா


முஹர்ரம் மாதத்தின் வருகை, இஸ்லாமிய ஆண்டின் புதியதொரு ஆண்டுக்கு வழி வகுத்துக் கொடுக்கின்றது. ஒவ்வொரு புதிய ஆண்டு பிறக்கும் பொழுதும், முஸ்லிம் மனங்களில் சந்தோஷத்தை விதைத்து வைத்திருக்கின்ற அந்த இனிமையான ஹிஜ்ரத் நாட்கள் ஞாபகப்பரப்பில் வந்து அலைமோதி, இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவரது அருமைத் தோழர் அபுபக்கர் (ரலி) அவர்களும் மக்காவைத் துறந்து மதீனா சென்று இஸ்லாத்திற்குப் புது வாழ்வு தேடிக் கொடுத்த அந்த நாட்கள் நினைவுக்கு வந்து ஒவ்வொரு முஸ்லிமையும், தான் முஸ்லிமாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு அந்த நாட்கள் தான் அடிப்படைக் காரணம் என்பதை நினைத்துப் பூரிப்படைய வைக்கின்றன. இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்குத் துடிக்கின்றன.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் - தானது முஸ்லிம்களை பலவீனத்திலிருந்து மாற்றி பலமிக்கவர்களாகவும், நிலையற்ற வாழ்க்கையிலிருந்து உறுதியான வாழ்க்கைக்கும் வழி வகுத்துக் கொடுத்தது மட்டுமல்லாமல், தங்களுக்கென ஒரு வாழ்க்கைப் பிரதேசத்தையும் கூட அது தேடிக் கொடுத்தது. அந்த நாட்களின் முதலாக இன்று வரை இறைவனின் திருப்பொருத்தத்தை நோக்கமாகக் கொண்ட பல ஹிஜ்ரத்கள் இந்தப் பூமியில் அணு தினமும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது.

முஸ்லிம்களின் வரலாற்று நெடுகிலும் குறைந்த அளவிலும், கூட்டம் கூட்டமாகவும், குழுக்கள் குழுக்களாகவும் முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த நாடுகளை விட்டும் ஹிஜ்ரத் செய்து வருகின்றார்கள். இன்றைய ஹிஜ்ரத்கள் கூட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எதற்காக மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கிப் பயணப்பட்டார்களோ, அதனை ஒத்த ஹிஜ்ரத் களும் இன்று நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்தப் பூமிப்பந்தில் இஸ்லாமும் குஃப்ர்-ம் இருக்கும் வரை ஹிஜ்ரத் கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும் என்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழி இங்கே முஸ்லிம்களின் வரலாறு நெடுகிலும் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அது இறுதி நாள் வரை தொடரும். பாவமன்னிப்பின் அல்லது பிராயச்சித்தத்தின் கதவுகள் அடைபடும் வரையும், கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும் வரையும் இந்த ஹிஜ்ரத் தொடர்ந்து கொண்டே இருக்கும். (அஹ்மத்)

இன்னுமொரு ஹதீஸில் ஹிஜ்ரத் எதுவரை தொடருமெனில், காஃபிர்களை எதிர்த்து முஸ்லிம்கள் போரிடும் காலம் தொடர்ந்து கொண்டிருக்கும் வரைக்கும் ஹிஜ்ரத்தும் தொடர்ந்து கொண்டிருக்கும். (அல் ஹைதமீ - மஜ்மாஆ அஸ்ஸவாய்த்)

பல நூற்றாண்டுகளின் நெடுகிலும், இன்றும் கூட முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களை விட்டு விட்டு இன்னுமொரு இடம் தேடி ஹிஜ்ரத் செய்த வண்ணமிருந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாடுகள், இடங்களில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள், அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் பல்வேறு தாக்குதல்கள் தான் இதுவரை அவர்கள் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற வீடுகளை விட்டும் வெளியேற்றி, புதிய வாழ்விடம் தேடிப் புறப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கின.

இன்றைக்கு முஸ்லிம் நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்களாக இருக்கட்டும் அல்லது முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்துகொண்டிருக்கின்ற நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்களாக இருக்கட்டும், இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட வண்ணம் தங்களது வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதில் யாருக்கும் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்கப் போவதில்லை. இந்தச் சூழ்நிலையில் வாழக் கூடிய முஸ்லிம்கள் இரண்டு வித காரணங்களுக்காக தன்னுடைய ஹிஜ்ரத்தை அமைத்துக் கொள்கின்றான்.

முதலாவதாக, தன்னையும் தன்னுடைய மார்க்கத்தையும், அதன் அடையாளங்களையும் பாதுகாத்துக் கொள்ளவென ஹிஜ்ரத் மேற்கொள்கின்றார்கள். இரண்டாவதாக, வாழ்க்கை வசதிகளைத் தேடி ஹிஜ்ரத் மேற்கொள்கின்றார்கள்.

இந்த இரண்டு வகையான நிர்ப்பந்தங்களின் காரணமாக ஒரு முஸ்லிம் தான் வாழ்ந்த பூமியை மட்டுமல்ல, சமுதாயத்தையும் விட்டு விட்டு முஸ்லிமல்லாத நாடுகளை நோக்கி தன்னுடைய ஹிஜ்ரத்தை மேற்கொள்கின்றான். இத்தகையவர்கள் அந்த முஸ்லிமல்லாத நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் தேடியும், இன்னும் பலர் சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேடியும் செல்கின்றனர்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக உலக முஸ்லிம் நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் ஆட்சியாளர்களின் அடக்குமுறை மற்றும் அரசியல் நிர்ப்பந்தங்கள் மற்றும் இனப்படுகொலை போன்ற தாக்கங்களின் காரணமாக பிறந்த இடங்களை விட்டு, கூட்டம் கூட்டமாக தங்களையும், தங்களது மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக வெளியேறி இருக்கின்றார்கள்.

இன்றைக்கு இவ்வாறான அழுத்தங்களின் காரணமாக பரவி வாழக் கூடிய முஸ்லிம் சமுதாயத்தை உலகம் முழுவதும் காண முடியும். இருப்பினும், நாடு விட்டு நாடு சென்ற அவர்களது வாழ்வில் பெரியதொரு மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டு விடப் போவதில்லை. சிறு சிறு மாற்றங்கள் தவிர இன்னும் அவர்களது வாழ்வில் மிகப் பெரிய பிரச்னையாக எழப் போவது எதுவென்றால், அவர்களது மார்க்க அடையாளங்களும், கலாச்சாரங்களும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தங்களது தீனை இழக்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கும் அவர்கள் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். தங்களது மார்க்க அடையாளங்களில் ஒரு சிலவற்றைத் தான் அவர்கள் பின்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றார்கள்.

இத்தகைய நிலையில் அமைந்து விடக் கூடிய ஹிஜ்ரத் கள் மார்க்க அடையாளங்களைத் தொலைத்து விடுவதில் மட்டும் நின்று விடுவதில்லை. மாறாக, தங்களது இளைய சமுதாயத்தை இக்கட்டான நிலையில் விட்டு விடுகின்ற நிலையில், இஸ்லாம் என்றால் என்ன? இஸ்லாமியக் கொள்கைகள் என்றால் என்ன? இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் எத்தகையவை? என்பன பற்றியெல்லாம் அவர்களால் அறிந்து கொள்ள இயலாத சூழ்நிலைகளில் வாழக் கூடியவர்களாக அவர்களது காலங்கள் செல்வதையும் நாம் கண்டு வருகின்றோம்.

எனவே, இன்றைய ஹிஜ்ரத்கள் ஒரு முஸ்லிமினுடைய வாழ்வில், அவனது மார்க்கத்தையும் மார்க்க அடையாளங்களையும் பாதுகாப்பதற்காக வேண்டிய அமைய வேண்டுமே ஒழிய, மார்க்கத்தை இழந்து விடக் கூடிய வகையில் அமைந்து விடக் கூடாது.

அனைத்து நபிமார்களும் பின்பற்றிய சுன்னா :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு மக்காவை விட்டு மதீனாவுக்குச் செல்வது என்பது கட்டாயமான ஹிஜ்ரத்தாக இருந்தது. ஆனால் மக்கா இஸ்லாத்தின் இருதயமாக வளர்த்தெடுக்கப்பட்டு விட்ட பின்னர் அந்த முக்கியத்துவமான ஹிஜ்ரத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அல்லாஹ் வகுத்தளித்திருக்கின்ற வரம்புகளைப் பேண முடியாத வாழ்க்கையில் வாழக் கூடிய சந்தர்ப்பங்களில் ஒரு முஸ்லிமின் மீது ஹிஜ்ரத் கடமையாகின்றது. இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

   إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنفُسِهِمْ قَالُوا فِيمَ كُنتُمْ  ۖ قَالُوا كُنَّا مُسْتَضْعَفِينَ فِي الْأَرْضِ ۚ قَالُوا أَلَمْ تَكُنْ أَرْضُ اللَّهِ وَاسِعَةً فَتُهَاجِرُوا فِيهَا ۚ فَأُولَٰئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ  ۖ وَسَاءَتْ مَصِيرًا وَمَن يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً ۚ وَمَن يَخْرُجْ مِن بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا.
(அல்லாஹ்வின் ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது ''நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?'' என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) ''நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்'' என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?'' என (மலக்குகள்) கேட்பார்கள்; எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள். அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்; ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான். இன்னும் எவர் அல்லலாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார். இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான். (4:97-100)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் பாவமன்னிப்பின் தவ்பாவின் கதவுகள் அடைக்கப்படும் வரை ஹிஜ்ரத் தொடர்ந்து கொண்டே இருக்கும். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும் வரை தவ்பாவின் கதவுகள் அடைக்கப்படாது. (அஹ்மத்)

மறுமை நாள் வரை ஹிஜ்ரத் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கும் என்று அனைத்து மார்க்க உலமாப் பெருமக்களும் ஒத்த கருத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் அல்லாதவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டிருக்கின்ற பூமியில் வாழக் கூடிய முஸ்லிமிற்கு தன்னுடைய மார்க்கக் கடமைகளைப் பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்படும் எனில், அவர் அந்த இடத்தை விட்டு ஹிஜ்ரத் செய்வது கடமையாகும்.

முஸ்லிமல்லாதவர்களைப் பெரும்பான்மையினராகவும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் வாழக் கூடிய நாட்டில் வாழக் கூடிய முஸ்லிம் தன்னையும் தன்னுடைய மார்க்கத்தையும் சுதந்திரமாகப் பின்பற்றி வாழ இயலாத நிலை இருக்கும் போதும், அதனை விட்டு ஹிஜ்ரத் செய்ய வேண்டிய கடமை இருந்தும், ஆனால் வயோதிபம், இயலாமை, நோய் ஆகியவற்றின் காரணமாக அந்த இடத்தை விட்டு வெளியேற இயலாத நிலை இருக்குமென்றால், அவர் மீது ஹிஜ்ரத் கட்டாயமில்லை.

(ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள். அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்; ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவம், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான். (4:98-99)