துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

புதன், 20 பிப்ரவரி, 2013

சகுனம் பார்ப்பது

தொற்று நோய், சகுனம் பார்ப்பது (இஸ்லாத்தில்) இல்லாதது. எனினும் நல்ல சகுனம் எனக்கு விருப்பமானது. அதுவோ அழகிய வார்த்தையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அனஸ் (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம், திர்மிதி.

சகுனம் பார்ப்பது ஷிர்க்காகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்:அபூதாவூத்.

பயன்கள் :
சகுனம் பார்ப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அது பறவைகள் அல்லது மற்றவற்றைக் கொண்டு சகுனம் பார்ப்பது ஒரு செயலைச் செய்யாது விட்டு விடுவதற்குச் சொல்லப்படும்.

இது ஒரு செயலைச் செய்யாமல் விடுவதற்குக் காரணமாக இருந்தால் ஷிர்க்காகும். காரணம் நன்மையோ, தீமையோ அளிக்கக் கூடிய சக்தி அல்லாஹ் அல்லாதவற்றுக்கு இருக்கின்றது என்று கருதுவதால்.

நல்ல சகுனம் பார்ப்பது விரும்பத்தக்கதாகும். அதில் அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணம் இருப்பதால்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தல்

யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன். (65:33)

முஃமின்கள் அலலாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கட்டும். (64:13)


பல உம்மத்தினர் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது நான் ஒரு நபியைப் பார்த்தேன். அவருடன் சிறு கூட்டமே இருந்தது. இன்னொரு நபியைக் கண்டேன். அவருடன் ஒன்றிரண்டு பேர் இருந்தனர். மற்றொரு நபியைக் கண்டேன் அவருடன் யாருமே இல்லை. அந்நேரத்தில் ஒரு மாபெரும் கூட்டம் எனக்குக் காட்டப்பட்டது. அவர்கள் என் உம்மத்தினர் தான் என்று நான் எண்ணிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அவர்கள் மூஸாவும் அவருடைய சமுதாயத்தினர் என்று எனக்குக் கூறப்பட்டது.

பிறகு மற்றொரு பெரும் கூட்டத்தை நான் பார்த்தேன். இவர்கள் தான் உமது உம்மத்தினர் என எனக்குக் கூறப்பட்டது. அவர்களுடன் கேள்வி கணக்கின்றி, வேதனையின்றி சுவர்க்கம் செல்லக் கூடிய எழுபதாயிரம் பேர்கள் இருந்தனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு அவர்கள் எழுந்து நமது வீட்டிற்குள் சென்று விட்டனர். அதன் பிறகு அங்கிருந்த மக்கள் அவர்கள் யார் என்ற சர்ச்சையில் மூழ்கி விட்டனர். சிலர், அவர்கள் இஸ்லாத்திலேயே பிறந்து அல்லாஹ்வுக்கு எதையுமே இணை கற்பிக்காதவர்களாக இருக்கலாம் என்றும் சிலர் வேறு விதமாகவும் சொல்லிக் கொண்டார்கள்.

அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்ததும் மக்கள் அவர்களிடம் விஷயத்தைக் கூறினார்கள். அப்போது, அவர்கள் தாம் பிறரிடம் ஓதிப் பார்க்கத் தேடாதவர்களும் (நோய்காக) சூடு போடாதவர்களும் சகுனம் பார்க்காதவர்களும், தம் இறைவன் மீதே நம்பிக்கை வைப்பவர்களும் ஆவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்.

பயன்கள் :
தவக்குல் (நம்பிக்கை) வைப்பதன் நிலையை அறிந்து கொள்வது, அது வணக்கங்களில் மிக முக்கியமானது.

தவக்குலை மெய்ப்படுத்துவது கேள்வி, கணக்கின்றி சுவர்க்கம் செல்வதற்குக் காரணமாக அமையும்.