துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

ஆறு நோன்புகள்

ரமளான் மாதத்தைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தில் பெருநாளைக்கு அடுத்த நாள் முதல் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நாட்கள் அல்லது ஷவ்வால் மாதம் முடியும் முன்னர் இந்த நோன்பு நோற்பது நபி (ஸல்)அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும் இன்னும் வலியுறுத்தப்பட்டதுமாகும்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் "யார் ஒருவர் ரமளான் மாதத்திள் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கிறாரோ (அவர்) வருடம் முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமம்". அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி): முஸ்லிம்

ரமளானில் நாம் பெற்ற இறையச்சம் தொடரும் விதமாக இந்த ஷவ்வால் நோன்பு அமைந்திருக்கிறது.

இவற்றை நாம் நோற்பதின் மூலம் தொடர்ந்து மற்ற சுன்னத்தான நோன்புகளான திங்கள், வெள்ளி, மாதம் மூன்று நோன்புகள் மற்றும் இதர நோன்புகள் நோற்கும் ஆர்வமும் நமக்கு ஏற்படலாம்.

ரமளான் மாதத்தில் நோன்புவைத்ததின் மூலம் நாம் பெற்ற இறையச்சம் மிகுந்த விலை மதிப்பற்ற பொக்கிஷத்தின் மகத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.