துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

சனி, 8 ஜனவரி, 2011

தேன்

தேன் என்றாலே பலரது நாவுகள் சப்புக் கொட்ட ஆரம்பித்து விடும். ஆம்! அந்தத் தேன் வயிற்றுப் பிரதேசத்தில் ஏற்படும் பல சிக்கல்களுக்குத் தீர்வு வழங்குகின்றது.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பல பொன்மொழிகள் இந்தத் தேன் வைத்தியத்தைப் பற்றி சிலாகித்துக் கூறுகின்றன. அவற்றின் மருத்துவ குணங்கள் சிலவற்றை இந்த மனித குலத்திற்கு பட்டியலிட்டும் காட்டியுள்ளன.
அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஒருமனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய சகோதரன் வயிற்றுத் தொந்திரவால் சிரமப்படுவதாகக் கூறுகின்றார். சிரமப்படும் அந்த சகோதரனுக்கு தேன் கொடுக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்துகின்றார்கள். பின் அந்த மனிதர் வந்து, தன்னுடைய சகோதரனுக்கு தேன் கொடுத்ததாகவும், ஆனால் அதனால் எந்தவித பலனும் இல்லை என்றும் கூறினார். மீண்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேனையே கொடுக்குமாறு அறிவுறுத்துகின்றார்கள். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேனைக் கொடுக்கச் சொல்வதும், மீண்டும் மீண்டும் அந்த மனிதர் வருவதுமாக மூன்று முறை நடைபெற்றது. இறுதியாக, அல்லாஹ் உண்மையே கூறினான், ஆனால் உன்னுடைய சகோதரனின் வயிறு அவ்வாறு (உண்மையைக்) கூறவில்லையே! என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறி விட்டு, திருமறையின் அந்நஹ்ல் அத்தியாயத்தின் 69 வது வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
( ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. )
இறுதியில் மீண்டும் தேன் கொடுக்கப்பட்ட பொழுது, அவரது சகோதரர் முன்பைக் காட்டிலும் நலம் பெற்றார்.
குழந்தைகளுக்கு வயிற்று நோவினைகளுக்கு!
1985 ல் பிரிட்டிஷ் ல் உள்ள ஒரு மருத்துவ நிறுவனம் இந்த தேனின் பயன்கள் குறித்து ஒரு ஆராய்ச்சியை நடத்தியது. ஆறிலிருந்து பதினொரு வயதுள்ள சிறுவர்களில், வயிற்று உபாதை உள்ளவர்களுக்கு இந்த தேன் வைத்தியத்தைப் பரிசோதித்துப் பார்த்தது. இந்த ஆய்வில் 169 சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
இவர்களில் ஒரு பிரிவினருக்கு வழக்கமாக வயிற்றோட்டத்திற்குக் கொடுக்கப்படும் குளுகோஸ், உப்புக் கரைசல், மற்றும் பொட்டாஷியம் கலந்த திரவம் மற்றும் நீர்ப் பொருள்கள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரண்டாவது குழுவுக்கு குளுகோஸ் மாவுக்குப் பதிலாக, தேன் பயன்படுத்தப்பட்டது. இதில் கீழக்கண்ட முடிவுகள் பெறப்பட்டன.
சால்மோனெல்லா, சிஜெல்லா, மற்றும் ஈ கோலி ஆகியவற்றினால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கை இந்த தேன் மருத்துவம் கட்டுப்படுத்தியது.
தேனில் நோய் எதிர்ப்பு சக்தி கலந்திருக்கின்றது என்பது முன் உள்ள ஆய்வுகளின் மூலம் அறிந்து கொள்ளப்பட்டது.
தேன் கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டு பண்ணும் மருந்துகள் குறைவாகவே தேவைப்பட்டது.
குளுகோஸ் க்கு மாற்றாக மற்ற திரவங்களுடன் மிகவும் பாதுகாப்பான முறையில், ஏற்கனவே அறிந்து கொள்ளப்பட்ட அளவீடுகளின்படி கலக்கப்பட்டு, நோயாளிகளுக்கு கொடுக்க முடிந்தது.
தேனில் அதிக அளவு சர்க்கரைச் சத்து இருந்த போதிலும், வயிற்றில் உள்ள தண்ணீர்ச் சத்து மற்றும் உப்புச் சத்தை கவர்ந்திழுக்க பயன்பட்டது, இது அரிசிக் கஞ்சிக் கரைசல் மற்றும் சுக்ரோஸ் ஆகியவற்றின் பயன்பாட்டை ஒத்திருந்தது.
50 மி.லி. தேனை ஒரு லிட்டர் அளவுள்ள கரைசலாகக் கலந்து (அதாவது சோடியம் மற்றும் பொட்டாசியக் கரைசலுடன் கலந்து) பயன்படுத்துவதானது, குளுகோஸ் கலந்த 111 மி.லி. கரைசலுக்கு ஈடாக இருந்தது.
தேனில் கலந்துள்ள ஃபிரக்டோஸ், வயிற்றில் உள்ள சோடியத்தை உறிஞ்சாமல் நீரை மட்டும் உறிஞ்சிக் கொள்ள உடலுக்குத் துணை செய்கின்றது. இதன் காரணமாக இரத்தத்தில் சோடியத்தின் அளவு மட்டுப்படுத்தப்படுவதோடு, சோடியத்தின் அளவு இரத்தத்தில் கூடி எதிர் விளைவு ஏற்படுவதிலிருந்தும் காக்கப்படுகின்றது.
தேன் அதிக அளவு சர்க்கரைச் சத்தை உடையதாக இருப்பினும், அதனை சரியான விகிதத்தில் பயன்படுத்தும் பொழுது, வயிற்றோட்டம் (நீராகப் பீச்சயடிப்பது) ஏற்படுத்துவதில்லை.
மேலே நாம் குறிப்பிட்டுக் காட்டிய நோய்க் கிருமிகளினால் உண்டாகும் வயிற்றோட்டத்தின் அளவை தேனானது குறைக்கும் அதேவேளையில், அந்தக் கிருமிகள் அல்லாத மற்ற கிருமிகளினால் ஏற்படும் வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்தப் பயன்படுவதில்லை.
தேனை வயிற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்துவதால் எதிர் விளைவுகளோ, அலர்ஜி போன்ற ஒவ்வாமையோ ஏற்படுவதில்லை. பாதுகாப்பானது. இன்னும் அநேகமாக எல்லா இடங்களிலும் மிக எளிதாகக் கிடைக்கின்றது. அதை குறிப்பிட அளவு விகிதங்களில் பயன்படுத்தும் பொழுது சில வயிற்று நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேனைப் பற்றிச் சுட்டிக் காட்டிய அறிவுரையானது, இந்த மனித சமூகத்திற்கு மிகப் பயனுள்ளதாகவும், ஆன்மீக நோய்களைத் தீர்க்க வந்த தூதர், மனிதர்களின் மனங்களை மட்டும் அல்ல, அவர்களது உடல் நோவுகளையும் அவர்களது அறிவுரைகள் தீர்க்கவல்லது என்பதை நாம் உணர முடிகின்றது.
நபித்தோழரின் சகோதரருக்கு மூன்று முறை தேன் கொடுக்கப்பட்டவுடன் அவரது நோவினை நீங்கியது போல, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரைகள் மனிதனின் மன நோய்களையும் தீர்க்கக் கூடியதாக இருக்கின்றது.
பின்பற்றுவோம்! நேர்வழி பெறுவோம்! அனைத்து நோவினைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவோம்.