துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

மரணம் நிரந்தரமல்ல


உன் மரணம் நிரந்தரமல்ல

மண்ணின் இடைக்கால விடுதலை

மறுபடியும் நீ எழுப்பப்படுவாய்

மறுமை எனும்

நியாயத்தீர்ப்பு நாளில்

மனிதா!

மரணம் உனக்கு நிரந்தரமல்ல

மண்ணின் இடைக்கால விடுதலை

மண்ணறையினில் கூட - நீ

மகிழ்வாய் உறங்கமாட்டாய்

நன்மை செய்தவர் சுகமான உறக்கத்தில்

தீமை செய்தவன் தீராத மண்ணறை வேதனையில்

கப்றுகள் கூட உன்னை நிராகரிக்கும்

மனிதா!

மரணம் உனக்கு நிரந்தரமல்ல

மண்ணின் இடைக்கால விடுதலை

மட்கிய உன் உடலுக்கும்

உயிர் தருவான் எம்மிறைவன்

உலகின் உன் செயல்களுக்காய்

உடல் உறுப்புகள் பதில் சொல்லும்

களவாடிய கைகளும்

பொய், புறம் பேசிய நாவும்

தனித்தனியே தம்மை எடுத்து வைக்கும்

உன் நன்மைகள் நற்கணக்கில்

பாவங்கள் தண்டைனைக்கு உரம் போடும்

மனிதா!

மரணம் உனக்கு நிரந்தரமல்ல

மண்ணின் இடைக்கால விடுதலை

சொர்க்கத்தின் சுகந்தங்களுக்காக

நன்மையைத் தேடிக் கொள் - உன்

பாவக்கரங்களை தவ்பாவில் மீண்டு

கழுவிக் களைந்துக் கொள்

மனிதா!

மரணம் உனக்கு நிரந்தரமல்ல

மண்ணின் இடைக்கால விடுதலை

மறுமை நாளை பயந்துகொள்

மரணம் வரும் முன் திருந்திக் கொள்.