துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

திங்கள், 3 ஜனவரி, 2011

என்னிறைவா

தரணியிலே தவள வைத்தாய் என்னிறைவா - என் அறிவுத்
தாகம் தீர்த்து வைப்பாய் என்னிறைவா
கற்றிடும் ஆற்றல் தந்திடுவாய் என்னிறைவா-என்
கல்வியில் முன்னேற்றம் தா என்னிறைவா
நோயில்லா வாழ்வதனை தந்திடுவாய் என்னிறைவா - என் நன்
நோக்கங்களில் வெற்றியைத்தா என்னிறைவா
சிந்தையிலே தெளிவு கொடு என்னிறைவா
சீறான வாழ்வினைத்தா என்னிறைவா
திருமறையை தெளிவாய் யாம்
கற்றிடத்தா என்னிறைவா
இறைமறையும், நபி வழியும்
எம் வழியாய் இருக்கச்செய் என்னிறைவா
நிறைவான செல்வம் கொடு என்னிறைவா - அதை
நேர்வழியில் செலவிடச்செய் என்னிறைவா
புகழ் போதை போக்கிடுவாய் என்னுடனே - என்
புத்தியிலே தெளிவினைத்தா என்னிறைவா
நல்லோர்தம் நட்பினைத்தா என்னிறைவா
நயவஞ்சகர் செயல் முடக்கு என்னிறைவா
சைத்தானை தூராக்கு எம்முடனே
சாகஸங்கள் செய்திடச் செய் என்னிறைவா
எல்லோர்க்கும் ஏழ்மை போக்கு என்னிறைவா
ஏந்தல் நபி வழி நடத்து என்னிறைவா
இகமெங்கும் எம்மதமாய்
இருக்கச்செய் என்னிறைவா
இருள் போக்கும் இஸ்லாத்தை
பரவச்செய் என்னிறைவா
போர்கள் இங்கு வேண்டாமே என்னிறைவா
மண்ணில் என்றும் அமைதியைத்தா என்னிறைவா
தீன் வழியில் வாழ்க்கைத் துணையைத்தா என்னிறைவா
திறம் பெற்ற மழலைகள் தா என்னிறைவா
வியாபாராம் செழிக்கச் செய் என்னிறைவா
விளை பயிர்கள் அதிகமாக்கு என்னிறைவா
உணவு வளம் தந்திடுவாய் என்னிறைவா
உலகில் பசி இல்லா நிலை வேண்டும் என்னிறைவா
வாழிடங்கள் வளமாக்கு என்னிறைவா- மக்கள் தம்
வீடில்லா நிலை போக்கு என்னிறைவா
நீர் பஞ்சம் போக்கிடுவாய் என்னிறைவா
நல்வழியில் மரணம் தா என்னிறைவா-அந்நிலையில் என்
நாவுகளில் கலிமாவை மொழிந்திடச்செய் என்னிறைவா
என் பாவங்களை மண்ணித்திடுவாய் கணிவுடனே
மண்னறையின் வேதனைகள் நீ;க்கிவிடு என்னிறைவா
இறுதித் தீர்ப்பு நாளில் எம் நபி(ஸல்) கூட்டத்தில்
நல்லேர்களில் எழுப்புவாய் என்னிறைவா
என் பிழைகள் பொறுத்திடுவாய் என்னிறைவா
சொர்க்கம் தந்திடுவாய் என்னிறைவா.