துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

தஹஜ்ஜுத் தொழுகை ஓர் ஆய்வு

உபரியான வணக்கங்களில் ஒன்று தான் ''தஹ்ஜ்ஜுத்''யாகும். இதற்கு பின்னிரவுத் தொழுகை என்று பொருள்படும். இத்தொழுகை மற்ற உபரித் தொழுகையை விட ரக்அத்துகளின் எண்ணிக்கையிலும், நீண்டநேரம் நின்றுதொழுவதிலும் சிறப்புற அமைந்துள்ளது. மேலும் நமது பிரார்த்தனைகள் இறைவனால் அங்கிகரிக்கப்படக் கூடிய நேரங்களில் ஒரு நேரமாக இரவுத்தொழுகையுள்ளது. மற்ற உபரித் தொழுகைகளை நேரமிருந்தால் தொழுது கொள்ளலாம். ஆனால் இத்தொழுகை தொழவேண்டுமெனில் இரவு தூக்ககத்தின் ஒரு பகுதியைத் தியாகம் செய்யவேண்டும் விழித்தொழுந்து இறைவனை தொழுதிட வேண்டும் இதனால் இறைவனே திருக்குர்ஆனில் இத்தொழுகையைப்பற்றி மாண்புகளை கூறி ஆர்வமுட்டுகிறான். ( நபியே) இன்னும் இரவில் (ஒருசில) பகுதியில் உமக்கு உபரியான (நபிலான) தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக் (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன் ' மகாமே மஹ்மூதா' என்னும் (புகழ்பெற்ற) தளத்தில் உம்மை எழுப்ப போதுமானவன் (17:79)

போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக!

அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிதுக் குறைத்துக் கொள்ளலாம்.
அல்லது அதை விடச்சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக் மேலும் குர்ஆனைத்தெளிவாகவும் நிறுத்தி நிறுத்தியும் ஒதுவீராக: (73:1,2,3,4,)

இரவுத் தொழுமாறு மேற்கண்ட வசனங்கள் மூலமாக தெளிவுப்படுத்தி அதன்பால் இறைவன் திருமறையில் ஆர்வமூட்டுகிறான். மேலும் பயபக்தி இறைநம்பிக்கையளர்களின் பண்புகளைப்பற்றி குறிப்பிடும்போது அவர்கள் இரவில் உபரித் தொழுகையை தொழுவார்கள் என்கிறான்.

நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரெனில் அவர்கள் அவற்றைப்பற்றி நினைவுட்டபப்பட்டால் அவர்கள் விழுந்து ஸுஜுது செய்தவார்களாய்த் தம் இறைவனைப்புகழ்ந்து துதிப்பார்கள் அவர்கள் பெருயைடிக்கவும் மாட்டார்கள்.

அவர்கள் விழுந்து ஸுஜுது செய்தவர்களாய்த் தம் இறைவனைப்புகழ்ந்து துதிப்பார்கள் அவர்கள் பெருமையடிக்கவும் மாட்டார்கள். அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தை துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கையார்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தர்மங்களில்) செலவும் செய்வார்கள். (அல்குர்ஆன்: 32:15,16)

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் (சுவர்க்கத்தின்) சோலைகளிலும் நீருற்றுகளிலும் இருப்பார்கள்.

அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக்கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.

அவர்கள் இரவில் மிகவும் சொற்பநேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
அவர்கள் விடியற்காலங்களில்(பிரார்த்தனைகளின் போது அறைவனிடம் மன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 51:15,16,17,18)

இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளை கூறிய இறைவன் தஹஜ்ஜத் தொழுகையைதொழுவதின் மாண்புகளையும் நவின்றுள்ளான்.

நிச்சயமாக இரவில் எழுந்திருந்து வணங்குவது (நாவு, மனம், செவி, பார்வை ஆகியவற்றையும்) ஒருமுனைப்படுத்துவதில் சக்தியானது இன்னும் வாக்கையும் நேர்படச் செய்கிறது. (73:6)

ஆரம்ப இரு வசனங்களில் தஹஜ்ஜத் தொழுகையை தொழுமாறு பெருமானார் (ஸல்) அவர்களை இதற்கு நற்கூலியாக ''மகாமே மஹ்மூத்''
என்னும் புனித தலத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் எழுப்பப்படலாம் என்று அல்லாஹ் முன்னறிவிப்பு வழங்குகிறான். மேற்கண்ட இருவசனங்கள் நபி(ஸல்) அவர்களையே முன்னிலைப்படுத்துவதால் நபி(ஸல்) அவர்கள்தான் தொழ வேண்டும் நாம் தொழ வேண்டிய அவசியமில்லைஎன்று புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக அடுத்துவரக் கூடிய வசனங்கள் கட்டளை என்ற அடிப்படையில் இல்லாமல் மூமின்கள்தங்களுடைய இறைத்தொண்டுகளில் ஒன்றாக தஹஜ்ஜத் எனும் இரவுத் தொழுகையை அனுதினமும் தொழுவார்கள் என்று கூறுகிறான்.

சிறப்பு: நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகையின்சிறப்புகளையும் அதை பேனுவதின் அவசியத்தையும் குறிப்பிட்டு அதை தொழுமாறு ஸஹபாக்களுக்கு ஊக்கப்படுத்தியுள்ளார்கள்.

ரமளானுக்கு பிறகு நோற்கபடக்கூடிய நோன்புகளில் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் வைக்கும் நோன்பாகும். மேலும் கடமையான தொழுகைகளுக்கு பிறகு சிறந்த தொழுகை இரவுத் தொழுகை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, நஸயி, அஹ்மத்.

இரவில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது
நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இரவில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் ஒரு முஸ்லிம் இம்மை மறுமையின் நற்பேறுகளை கேட்பானேயானால் நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் கேட்டதை வழங்கி விடுவான். இது அனைத்து இரவிகளிலுமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிப்பேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவுக் கண்டால் அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவுக் கண்டு அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் இருந்தேன். ''இரண்டு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்கு கொண்டு சென்றார்கள். ம்ணற்றுக்கு சுற்று சுவர் எழுப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் (சுவர்) எழுப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு கொம்புகளும் இருந்தன. அதில் எனக்கு தெரிந்த சில மனிதர்களும் இருந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன் என்று கூறினேன். அது சமயம் வேறு ஒரு வானவர் என்னை சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவுக் கண்டேன். இக்கனவை ஹஃபீஸா(ரலி) இடம் கூறினேன். அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களில் மிகவும் நல்லவர்'' என்று கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை. அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

கடமையான, தொழுகைகளுக்கு பிறகு சிறந்த (உபரியான) தொழுகை இரவுத்தொழுகை என்று சிலாஹித்த நபி(ஸல்) அவர்கள் இத்தொழுகை நேரத்தில்தான் இறைவன் பிரார்த்தனைகளை அங்கீகரிப்பதாக முன்னறிவிப்பை நபி(ஸல்) அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

அவசியம்
மக்களே முகமன் கூறுவதை விசாலமாக்கி கொள்ளுங்கள் மேலும் (ஏழைகளுக்கு) உணவு வழங்குங்கள், மக்கள் தூங்கி கொண்டிருக்கும் நிலையில் இரவில் (எழுந்து) தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் ஸலாம்(ரலி) நூல்: திர்மிதி

நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு விழித்ததும் சுப்ஹானல்லாஹ்! இந்த இரவில் தான் எத்தனை சோதனைகள் இறக்கப்பட்டுள்ளது? எத்தனை பொக்கிஷங்கள் திறக்கப்பட்டுள்ளன. அறைகளில் உள்ள பெண்களை எழுப்பி விடுவோர் யார்? இவ்வுலகில் ஆடை அணிந்திருந்த எத்தனையோ பேர் மறுமையில் நிர்வாணிகளாக இருப்பார்கள் என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி) நூல்: புகாரி

நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் பாத்திமா (ரலி) இல்லத்திற்கு வருகை தந்துபோது என்ன நீங்கள் இருவரும் தொழவில்லையா? என்று வினவினார்கள். அறிவிப்பவர்: அலி(ரலி) நூல்: புகாரி

உபரியான இரவுத் தொழுகையை தொழுமாறு நபி(ஸல்) அவர்கள் அவசியப்படுத்தினார்கள். அதற்காக தோழர்களின் இல்லங்களின் கதவை தட்டி எழுப்பியுள்ளார்கள்.

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான தொழுகை தாவூது (அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள் பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பை விட்டு விடுவார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் இரவில் எழுந்து கொள்வார்கள். அதனால் அவருடைய பாதங்கள் வீங்கிவிடும். அல்லாஹ்வின் தூதரே ஏன் இவ்வாறு செய்கிறீர்கள். உமக்கு நான் முன்பின் பாவங்கள் மன்னிக்கபட்டனவே என்று நான் வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நான் (இறைவனுக்கு) நன்றியுள்ள அடியானாக இருக்க கூடாதா என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

உபரித் தொழுகைகளில் மேன்மையான தொழுகையான தஹஜ்ஜுத் தொழுகையை தொழுவதில் அதை பேணுவதில் இறைத்தூதர் தாவூத்(அலை) முன்மாதிரியாக திகழ்ந்ததை முன்மாதிரியாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு உபதேசித்துள்ளார்கள். மேலும் பெருமானார்(ஸல்) அவர்களின் முன்பின் பாவங்கள் இறைவனால் மன்னிக்கப்பட்டும் கூட அதற்கும் நன்றி செலுத்தும் விதமாக நபி(ஸல்) உபரியான இரவுத் தொழுகை தொழுதது நம்முடைய மேனி சிலிர்க்கிறது.

''தஹஜ்ஜுத்'' தொழுகை நேரம்
தஹஜ்ஜுத் தொழுகை தொழுவதற்காக இரவின் அனைத்து நேரங்களையும் நாம் கையாள முடியாது மாறாக அத்தொழுகைக் கொன்று பிரத்தியேகமான நேரத்தை நபி(ஸல்) அவர்கள் தன் செயல்பாட்டின் மூலம் வகுத்து தந்துள்ளார்கள். மஸ்ரூக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு விருப்பமான அமல் எது என்று ஆயிஷா(ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் தொடர்ந்து செய்யும் அமல் என்று விடையளித்தார்கள். (இரவில்) நபி(ஸல்) அவர்கள் எப்போது எழுவார்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் 'சேவல் கூவும் போது எழுவார்கள்' என்று விடையளித்தார்கள். நூல்: புகாரி
மற்றொரு அறிவிப்பில் சேவல் கூவும் போது எழுந்து தொழுவார்கள் என்று காணப்படுகிறது.

நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி)யிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் இரவின் ஆரம்ப நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் உறங்குவார்கள். இரவின் கடைசியில் எழுந்து தொழுவார்கள், பிறகு படுக்கைக்கு செல்வார்கள். அறிவிப்பவர்: அஸ்வத்(ரலி) நூல்: புகாரி

(இரவின் ஆரம்ப நேரத்தில் தொழமுயன்ற) அபூதர்தா(ரலி) இடம் ''உறங்குவீராக! இரவின் கடைசிப்பகுதியில் எழுவீராக! என்று ஸல்மான் (ரலி) கூறினார்கள். இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ''ஸலமான் கூறுவது உண்மையே!'' என்று குறிப்பிட்டார்கள். நூல்: புகாரி

உபரியான தஹஜ்ஜித் தொழுகை இரவின் பிற்பகுதியில் தான் தொழ வேண்டும் என்பது தெளிவாகிறது.

தஹஜ்ஜுத் தொழுகை ரக்அத்தின் எண்ணிக்கை
தஹஜ்ஜுத் தொழுகையின் மாண்புகளையும் அதன் அவசியங்களையும் விவரித்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ரக்அத்துகளின் எண்ணிக்கையும் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள். இதன் மூலமாக தஹஜ்ஜுத் தொழுகையை நம் இஷ்டத்திற்கேற்ப எத்தனை எண்ணிக்கையிலும் தொழுது கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை நீக்கி அதற்கு ஒரு வரம்பை நிர்ணயித்து தொழுதுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ''இஷா தொழுகை''யிலிருந்து பதினோரு ''ரக்அத்து''கள் தொழுவார்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்துகளுக்கு மத்தியிலும் ஸலாம் சொல்வார்கள். ஒரு ''ரக்அத்வித்ரு'' தொழுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நான் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையைப் பற்றி வினவினேன். நபி(ஸல்) அவர்கள் ஏழு ரக்அத்துகள், (சிலசமயம்) ஒன்பது ரக்அத்துகள், பதினோரு ரக்அத்துகள் ஃபஜ்ரின் இரண்டு ரக்அத்துகள் (ஸுன்னத்) ஆகியவை தொழுவார்கள். அறிவிப்பவர்: மஸ்ரூக்(ரலி) நூல்: புகாரி

நபி(ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்துகள் தொழுவார்கள் என்று மேற்கண்ட முதல் ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது. இரண்டாம் ஹதீஸில் ஏழு ரக்அத்துகள், பதினோரு ரக்அத்துகள், என்பது வித்ரு தொழுகையின் எண்ணிக்கையாகும். பதினோரு ரக்அத்துகள் என்பது தஹஜ்ஜுத் தொழுகையின் எண்ணிக்கையாகும் என்பது தெளிவாகிறது.

நபி(ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்துகள் தொழுவார்கள் அதில் உள்ளவை தான் வித்ரு மற்றும் ''ஃபஜ்ரின்'' இரண்டு (சுன்னத்தான) ரக்அத்துகள் அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம் அபூதாவூத், நஸயீ, தாரமி

ரமளானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் நபி(ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்துகளை விட அதிகமாக தொழுவது கிடையாது.
நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதே பின்னர் மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஸலமா(ரலி) நூல்: புகாரி

நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்துகள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (வழக்கமான) தொழுகையாக இருந்தது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

உபரியான இரவுத்தொழுகையில் எண்ணிக்கையை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவுப்படுத்துகிறது. ஆனால் உபரித் தொழுகையின் ஆர்வலர்கள் ''தஹஜ்ஜுத் தொழுகையை தொழுகிறோம் என்ற பெயரில் ரக்அத்துகளின் வரம்பை மீறாமல் இரவெல்லாம் தொழுது கொண்டே இருப்பார்கள். இதற்கு முன்மாதிரியாக பெரியார்கள், நல்லடியார்களின் சரித்திரத்தை முன்னிலைப்படுத்துவார்கள். ஆனால் இச்சரித்திரங்கள் மேற்கண்ட நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரத்திற்கு நேர் மாற்றமாக அமைந்துள்ளதை நிதர்சனமாக காண்கிறோம்.

''தஹஜ்ஜுத்'' தொழுகை இரண்டிரண்டாக தொழுதல்.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை தொழும் விதம் யாது? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை அஞ்சினால் ஒரு ரக்அத் வித்ரு தொழுவீராக என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: புகாரி,

நபி(ஸல்) அவர்கள் இரவில் தொழுதால் சுருக்கமாக இரண்டு ரக்அத்துகளைக் கொண்டு ஆரம்பிப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம்

கடமையான தொழுகையைப் பொருத்தவரை அதனுடைய எண்ணிக்கை அடிப்படையின் தொழவேண்டும். ஆனால் உபரித் தொழுகையை பொறுத்தவரை இரண்டிரண்டாக தான் தொழவேண்டும். இதுதான் கடமைக்கும், உபரிக்கும் மத்தியில் வித்தியாசமாகும். இதே அடிப்படையில் தஹஜ்ஜுத் தொழுகை தொழவேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவுப்படுத்துகிறது.

''தஹஜ்ஜுத் தொழுகையை நீட்டித் தொழலாம்.
நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையில் சிறந்தது எது? என்று வினவப்பட்டது அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''நீண்ட நேரம் நின்று தொழுவது'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்

நான் ஒரு இரவு நபி(ஸல்) அவர்களுடன் தொழுதேன் நான் தவறான முடிவுக்கு வருமளவுக்கு அவர்கள் நின்று கொண்டே இருந்தார்கள் என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறியபோது அந்தத் தவறான முடிவு எது? என்று நான் கேட்டேன் அதற்கவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுவதை விட்டுத் தொழுகையை முறித்து விடலாம் என்று எண்ணினேன் என விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூவாயில்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் தொழுதேன் அவர்க்ள (தொழுகையில்) ஸுரத்துல பகராவை ஆரம்பித்து 100வது வசனத்தில் ருகூவு செய்வார்கள் என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன். பிறகு தொடர்ந்தார்கள். நான் முன்பு போலவே எனக்கு நானே கூறிக்கொண்டேன். பிறகு ஸுரத்துன்நிஸாவை ஆரம்பித்தார்கள். அதை ஒதிக் கொண்டே இருந்தார்கள். பிறகு ஆல இம்ரானை ஸுராவை ஆரம்பித்தார்கள். தொழுகையில் தஸ்பீஹ் என்ற வசனத்தை கடந்தால் தஸ்பீஹ் கூறுவார்கள். கேள்வி தோரணையில் உள்ள ஒரு வசனம் கடந்தால் கேள்வி தொடுப்பார்கள். பிறகு ருகூவு செய்வார்கள் அதில் ''ஸுப்ஹான ரப்பியல் அழீம்'' என்று கூறுவார்கள் எவ்வாறு நீண்ட நேரம் நின்று தொழுதார்களோ அவ்வாறே நீண்ட நேரம் ருகூவு செய்வார்கள். பிறகு ருகூவிலிருந்து எழுந்ததும் அவ்வாறே நீண்டநேரம் நிற்பார்கள். மேலும் ஸஜ்தா செய்யும் போதும் நீண்ட நேரம் அவ்வாறே ஸஜ்தா செய்வார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்துகள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (வழக்கமான) தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் உங்களில் ஒருவர் ஐந்து வசனங்கள் ஓதக்கூடிய நேரம் ஸஜ்தா செய்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

உபரித் தொழுகைகளில் சிறந்த தொழுகை தஹஜ்ஜுத் தெரிந்து கொண்டோம் மேலும் நீண்ட நேரம் நின்று தொழுவதும் சிறந்த தொழுகையாக நபி(ஸல்) அவர்கள் சிலாஹித்து கூறியுள்ளார்கள்.

நீண்ட நேரம் நின்று தொழும் விதத்தையும் நபி(ஸல்) அவர்கள் செயல்முறை மூலமாக காட்டியுள்ளார்கள். எந்த அளவுக்கெனில் அதன் நீளத்தையும், அழகையும் வார்த்தைகளில் வழங்க இயலாது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் காரணம் கற்பிக்கிறார்கள். நின்று தொழுகிற போது பெரிய ஸுராக்களை ஓதக் கூடியவர்களாகவும் அதற்கு இணையாக நீண்ட நேரம் ருகூவும், ஸுஜுதும் செய்வார்கள். இதனால் தான் நபி(ஸல்) அவர்கள் இதற்கு (நீண்ட நேரம் நின்று தொழுவது) சிறந்த தொழுகையாக நவின்றுள்ளார்கள்.
தஹஜ்ஜுத்தில் சில சிறப்பு அம்சங்களை கடைபிடிக்க!

பிரார்த்தனை
தஹஜ்ஜுத் தொழுகைக்கென சில விசேஷச பிரார்த்தனைகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். அத்துவாக்களை மனனம் செய்து இறைவனின் அருளை பெற முயற்சிக்க வேண்டும்.
இரவில் எழுந்ததும் ஓதவேண்டிய பிரார்த்தனை
''யார் இரவில் விழித்து''
''லாயிலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லஹுல்முல்கு
வல்ஹுல்ஹம்து வஹீவஅலாகுல்லி ஷய்யின்கதீர் அல்ஹம்து
லில்லாஹி வசுப்ஹானல்லாஹு வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு
அக்பர் வலா ஹவுலாவலாகுவ்வத இல்லாபில்லாஹ் என்று பிரார்த்தித்த பிறகு அல்லாஹும்மக்ஃபிர்லி என்றோ வேறு பிரார்த்தனைகளோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். அறிவிப்பவர்: உபாதாபின்ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி, இப்னுமாஜா, தாரமி

பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை; அவன் ஏகன் அவனுக்கு நிகரானவர், இல்லை ஆட்சியும் அவனுக்குரியது; புகழும் அவனுக்குரியது; அவன் அனைத்து பொருட்கள் மீதும் ஆற்றல் உள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் அவன் தூயவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது என்று கூறிவிட்டு இறைவா என்னை மன்னித்து விடு என்றோ அல்லது வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும்.

இரண்டாம் பிரார்த்தனை:
நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் (பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்)
அல்லாஹும்மலகல்ஹம்து அன்த கய்யிமுஸ்ஸமாவாதி
வல்அர்லி வமன்ஃபீஹுன்ன வலகல்ஹம்து லக முல்குஸ்ஸமாவாத்வல் அர்ளி
வமன்ஃபியின்ன வலகல்ஹம்து அன்த நூருஸ்ஸமாவாதி வல் அர்ளி
வலகல் ஹம்து அன்த முல்கு ஸ்ஸமாவாதி வல்அர்ளி. வலகல் ஹம்து அன்தல்ஹக்கு வவஅதுகல்ஹக்கு வலிகாவுக ஹக்கு வகவுலுகஹக்கு வல்ஜன்னது ஹக்கு வந்நாரு ஹக்கு வந்நபிய்åஹக்கு வமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஹக்கு வஸ்ஸாஅது ஹக்கு அல்லாஹும்ம லகஅஸ்லமது வபிக ஆமனது வஅலைக தவக்கல்து
வயிலைக அனப்து வபிக காஸம்து வலைக ஹாகம்து ஃபக்ஃபிர்லி மாகத்தம்து வமாஅக்கரது வமாஅஸ்ரர்து வமா அஃலன்து அன்தல்முகத்திமு வஅன்தல் முஅக்கிரு லாயிலாஹ இல்ல அன்த (என்றோ அல்லது லாயிலாஹா கைருக என்றோ கூறலாம்)

பொருள்:
இறைவா! உனக்கே புகழ் அனைத்தும், வானங்கள் பூமி அவற்றில் உள்ளவை அனைத்தையும் நிர்வம்ப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும் வானங்கள் பூமி அவற்றில் உள்ளவைகளின் உரிமை உனக்காக உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும் வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும் நீ உண்மையானவன், உன் வாக்குறுதி உண்மை, உனது சந்திப்பு உண்மை உனது கூற்று உண்மை, சொர்க்கம் உண்மை, நரகம் உண்மை நபிமார்கள் உண்மை, முஹம்மது உண்மையானவர்கள் மறுமை நாள் உண்மை, இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன்மீதே உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன் உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்த பம்ரங்கமாக செய்த, இரகசியமாக செய்த பாவங்களை மன்னித்து விடு நீயே (சிலரை) முற்படுத்துபவன் (சிலரை) பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

மூன்றாம் பிரார்த்தனை
நபி(ஸல்) அவர்கள் இரவில் விழித்து அமர்ந்து தங்களுடைய கையால் முகத்தை தடவித் தூக்கக்கலத்தை போக்கினார்கள். பின் ஆல இம்ரான் அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்கள் (3:191லிருந்து 200 வரை) ஓதினார்கள். பிறகு எழுந்து பழைய தோல்பையிலிருந்து (தண்¡ர் எடுத்து உளூ செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நான்காம் பிராத்தனை
நான் அன்னை ஆயிஷா(ரலி) அவக்ளிடம் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகைகளின் துவக்கத்தில் என்ன ஓதுவார்கள்? என்று வினவினேன். அதற்கு அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் தங்களுடைய இரவுத் தொழுகையின் துவக்கத்தில்.
அல்லாஹும்ம ரப்ப ஜீப்ரயீல வமீகாயீல வ இஸ்ராஃபீல ஃபதிரஸ்
ஸமாவாதி வல்அர்ளி ஆலிமுல் கைபி வஷ்ஷஹாததி, அன்த
தஹ்குமு பைன இபாததிக ஃபிம கானு ஃபீஹி யக்தலிஃபூன்
இஹ்தினி லமக் துலிஃப ஃபிஹு மினல்ஹக்கு பிஇஸ்னிக இன்னக தஹ்தி மன் தஷாவு இலா சிராதின் முஸ்தஜீம்.
மேற்கண்ட துவாவை ஓதுவார்கள். அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின்அவுஃபு நூல்கள்: முஸ்லிம், அபூதா¥த், திர்மிதி, நஸயீ-இப்னுமாஜா

பொருள்:
இறைவா! ஜிப்ரயீல், மீகாயில், இஸ்ராஃபீல் -யின் இறைவனே வானங்களையும் பூமியை படைத்தவன், மறைவான, வெளிப்படையான விஷயங்களை அறியக் கூடியவன், உம்முடைய அடியார்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டியிருக்கிறார்களோ அவ்விஷயத்தில் நீ தீர்ப்பவனாக இருக்கிறாய்! அவர்கள் (அடியார்கள்) சத்தியத்திலிருந்து எதில் கருத்து வேறுபாடு கொண்டேயிருக்கிறார்களே அவ்விஷயத்தில் உம்முடைய அனுமதின் மூலமாக நீ அவர்களுக்கு நேர்வழிகாட்டுவாயாக! நிச்சயமாக நீ நாடியவர்களுக்கு நேரான வழியின் பக்கம் செலுத்த கூடியவராக இருக்கிறாய்!

உபரியான இரவுத் தொழுகைகளை தொழுவதற்கு முன்னால் எழுந்தவுடன் நபி(ஸல்) அவர்கள் நான்கு பிராத்தனைகளை கற்று தந்துள்ளார்கள். அவைகளில் முதல் பிராத்தனையைப் பற்றி கூறும் போது அது இறைவனிடம் அங்கீகரிக்கப்படும் என்று நற்செய்தி வழங்கியுள்ளார்கள். இரண்டாம் மூன்றாம் பிராத்தனைகள் நீண்ட பிரார்த்தனையாகவும் நபி(ஸல்) அவர்கள் பிராத்தித்துள்ளார்கள். மேலும் ஆல இம்ரானின் (191லிருந்து 200வரை) கடைசி பத்துவசனங்களையும் ஓதியுள்ளார்கள். அந்த பத்து வசனங்களும் பிரர்த்தனை வடிவில் அமைந்துள்ளது. இவை மூன்ற பிரார்த்தனைகளையோ அல்லது மூன்றில் ஒன்றை மனனம் செய்து அதை ஒவ்வொரு நாளும் பேணி இறைவனுடைய அருளை பெற முயற்சிக்க வேண்டும்.

இரவுத்தொழுகை முடிந்ததும் வலப்பக்கம் சாய்தல்
நபி(ஸல்) அவர்கள் இரவு தொழுகை முடிக்கையில் ஃபஜ்ரு தொழுகைக்காக முஅத்தின் பாங்கு சொல்லி முடிந்துவிட்டால் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள் முஅத்தின் இகாமத் சொல்லும் வரை வலப்புறமாக சாய்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய சுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள் இல்லாவிடில் தொழுகைக்கு அழைக்கும் வரை படுத்துக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

உபரியான தஹஜ்ஜுத் தொழுகையின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக இரவுத் தொழுகையை முடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் சிறிதுநேரம் வலதுபக்கமாக சாய்வதை பிரியமாக்கி கொண்டுள்ளார்கள். இதற்கென தனியான காரணத்தை நபி(ஸல்) அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. மாறாக விருப்பமான அடிப்படையில் வலது பக்கமாக சிறிதுநேரம் சாய்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளர்கள். நேரமும், சந்தர்ப்பமும் நமக்கு எட்டுமானால் நாமும் அவ்வாறே சிறிது நேரம் வலது பக்கம் சாய்ந்து படுத்துக்கொள்ளலாம்.

தஹஜ்ஜுத் தொழுகை தவறினால் பகலில் தொழலாமா?
மற்ற உபரித் தொழுகைகளுக்கு இல்லாத சிறப்பு இத்தொழுகையில் அமைந்துள்ளது. அதாவது இரவில் ''தஹஜ்ஜுத்'' நோய் போன்ற காரணங்களால் தொழமுடியாமல் போனால் அதை பகலில் நிறைவேற்றலாம் என்றும் பெருமானார் நபி(ஸல்) அவர்கள் தன் செயல்பாட்டின் மூலம் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் நோயின் காரணமாக அல்லது வேறு காரணமாகவோ இரவில் தொழுகை இழந்து விட்டால் பகலில் 12 ரக்அத்துகள் தொழுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ

உபரித் தொழுகைகளில் பேணிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் இரவில் தொழ முடியாமல் போனதால் பகலில் தொழுதுள்ளார்கள். மாறாக இதை கட்டாயம் என்று வாதிட முடியாது. சிலர் அப்படிப்பட்ட வாதத்தை எடுத்துவைக்கின்றனர். ஆனால் அது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில் ''வித்ரு'' ரக்அத்களின் எண்ணிக்கையை நாம் ஆராய்ந்தோமானால் 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் ரக்அத்துகள் அமைந்திருப்பதை காணலாம். ''தஹஜ்ஜுத்'' எனும் 8 ரக்அத்துகளை தொழுதுவிட்டு 1அல்லது 3 ரக்அத்கள் தொழலாமே தவிர 5,7,9 என்ற எண்ணிக்கையில் ''தஹஜ்ஜுத்''துடன் வித்ரை தொழுதுவிட்டு. எனவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சில வேளை வித்ரு மட்டும் தொழுதுள்ளார்கள். சில வேளை ''தஹஜ்ஜு''தை தொழுது குறைந்த எண்ணிக்கை(3)யில் வித்ரை தொழுதுள்ளார்கள். அதற்கு மேற்படி அவர்கள் தொழுதது கிடையாது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் சான்றாக இருக்கிறது. இதன்மூலமாக ''தஹஜ்ஜுத்'' தொழுகை கட்டாயம் என்று இல்லாமல் பகலிலும் தொழுதுள்ளார்கள். மேலும் ஆதாரங்கள் பின்னால் தெளிவாகிறது.
''தஹஜ்ஜுத்'' தொழுகையில் கவனம் தேவை

''தஹஜ்ஜுத்'' தொழுகையின் மாண்பை அறிந்தவர்கள் அதை தினந்தோறும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சிலர் சில வேளை உடல் பலகீனமாகயிருந்தும் மிகவும் கஷ்டத்தோட அதை நிறைவேற்றுகிறார்கள். மேலும கடும் உழைப்பின் காரணமாகவோ, அல்லது இரவு விழித்ததின் காரணமாகவோ, கடுமையான தூக்கம் இருக்கும், தினந்தோறும் ''தஹஜ்ஜுத்'' தொழுகை தொழுவதில் வழக்கமுடியவர்கள் அன்றும் நிறைவேற்றியதாக வேண்டும் எனும் லட்சியத்தில் அரைத்தூக்கத்தில் உளூச் செய்து ''தஹஜ்ஜுத்'' தொழுகையை நிறைவேற்றுவார்கள். இதனால் எத்தனை ரக்அத்துகள் தொழுதார், எதை ஓதினார், என்ன பிராதித்தார் என்பதை அவர் அறியமுடியாமல் போய் விடுகிறார்கள். எனவே இப்படிப்பட்ட சமயங்களில் (''தஹஜ்ஜுத்'' தொழுகையை தொழாமல் அதை பகலில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நிறைவேற்றுவது போன்று பகலில் நிறைவேற்றலாம்) நபி(ஸல்) அவர்களும் இவ்வாறு தொழுவதை தடுத்திருக்கிறார்கள்.

''உங்களில் எவராவது தொழுது கொண்டிருக்கும் போது கண் அயர்ந்து விடுவாரானால் அவரை விட்டும் தூக்கம் நீங்குகிறவரை தூங்கிவிடட்டும ஏனெனில் சிற்றுரக்கம் ஏற்பட்டுயிருந்தும் தொழுவாரேயானால் அவர் (இறைவனிடம்) பாவமன்னிப்பு கோருகிறாரோ அல்லது தன்னை பழிக்கிறாரோ என்பது எவருக்கு தெரியாது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

உங்களில் ஒருவர் தொழுகையில் கண் அயர்ந்து விடுவோரானால் தாம் என்ன ஓதுகிறோம் என்பதை(ச் சரியாக) அறிவது வரை தூங்கி விடட்டும். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி

நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது ஓர் இரவோ அல்லது இரண்டு இரவுகளோ தொழவில்லை. அறிவிப்பவர்: ஜுன்துப்(ரலி) நூல்:புகாரி

சிலர் உபரியான ''தஹஜ்ஜுத்'' தொழுகையை தொழவேண்டுமென்பதற்காக அதை மக்கள் கட்டாயம் தொழவேண்டும் என்பதற்காக பெரியார்களின், நல்லடியார்களின் உவமைகளை முன் வைக்கிறார்கள், ஆனால் அவர்களின் சரித்திரங்கள் நமக்கு முன்மாதிரி இல்லை மாறாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கையே நமக்கு முன்மாதிரி நபி(ஸல்) அவர்கள் ''தஹஜ்ஜுத்'' தொழுகை விஷயத்தில் நடந்துக் கொண்டார்களோ அவ்வாறு தான் நடக்க வேண்டும். எனவே அதிக தூக்கம் அல்லது நோய் போன்ற நேரங்களில் முடிந்தளவு விட்டுவிட்டு நல்ல நிலையில் ''தஹஜ்ஜுத்'' தொழுகையை தொழவேண்டும். இதற்கு மேற்கண்ட பெருமானார்(ஸல்) அவர்களின் ஹதீஸே நமக்கு சான்றாக திகழ்கிறது.

''தஹஜ்ஜுத்'' தொழுகைக்காக எழும் போது பல் துலக்குதல்:-
''தஹஜ்ஜுத்'' தொழுவதற்காக பல் துலக்குவதும் இதனுடைய சிறப்பம்சமாக இருக்கிறது. பொதுவாக தொழுகைக்காக உளூ செய்வார்கள். ஆனால் உளூவில் பல் துலக்குவதை நபி(ஸல்) அவர்கள் அவசியமாக்கவில்லை. ஆனால் இச்சிறப்புக்குரிற தொழுகையில் சிறப்பம்சமாக பல் துலக்குவதையும் அவசியமாக்கியிருக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ''தஹஜ்ஜுத்'' தொழுவதற்காக இரவில் எழும் போது பல் துலக்குவார்கள். அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) நூல்: புகாரி

நம்முடைய உடலில் ஆகாரம் புகுவதற்கு எந்திரமாக திகழக்கூடிய வாயை(பல்லை) எப்போழுதும் சுத்தமாக வைத்து கொள்ளலாம் நலம் என்பதை நபி(ஸல்) அவர்கள் செயல்மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.

''தஹஜ்ஜுத்'' தொழுவதை வழக்கமாக்கி கொள்ளுதல்
நபி(ஸல்) அவர்கள் என்னிடம் அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப் போல நீர் ஆகிவிடாதீர் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) நூல்: புகாரி

''தஹஜ்ஜுத்'' தொழுகையின் மாண்புகளை அறிந்துக் கொண்டோர். அதை தொழ வேண்டும் என்று விரும்ப ஆரம்பத்தில் ஆர்வமாக துடிப்பாக தொழுவார்கள் சில நாட்கள் பிறகு அப்படியே விட்டுவிடுவார்கள். பிறகு ''தஹஜ்ஜுத்'' தொழுகை என்பதையே மறந்து விடுவார்கள். இதுதான் முஸ்லிம்களின் யதார்த்த நிலையாக இருக்கிறது. இப்படிப்பட்ட அலட்சியப்போக்கு நம்மிடம் இருக்க கூடாது. இப்படிப்பட்ட அலட்சியப் போக்கு நம்மிடம் இருக்க கூடாது என்பதற்காக நபி(ஸல்) அவர்கள் அவரின் செயலை பாராட்டி எனவே ''தஹஜ்ஜுத்'' தொழுகையை அனுதினமும் பேணுவீராக என்று உபதேசித்துள்ளார்கள்.

''தஹஜ்ஜுத்'' தொழுகையின் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் முழு ஆய்வையும் தெரிந்துக் கொண்டோம்; எனவே ''தஹஜ்ஜுத்'' தொழுகையை தொழுது இறைவனுடைய அருளை பெறுவோமாக!

பிற்காலத்தவரால் ''தராவீஹ்'' என்றழைக்கப்படும் ரமழான் இரவுத் தொழுகை
நபி(ஸல்) அவர்கள் ரமழான் இரவுத் தொழுகை விஷயமாக (மக்களுக்கு அதை வலியுறுத்திக் கட்டளையிடாமல் ''ரமழானில் ஈமானோடும், நன்மைகிட்டும் வணக்கம் புரிவோரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்'' என்று கூறி ஆர்வமூட்டிக் கொண்டிருந்தார்கள். (ரமழான் இரவுத் தொழுகை தினசரி ஜமாஅத்தாக - பலரும் சேர்ந்து தொழாமலிருக்கும்) இந்நிலையில் நபி(ஸல்) அவர்கள் காலஞ்சென்று விட்டார்கள். பின்னர் அபூபக்கரு(ரழி) அவர்கள் ஆட்சிகாலத்திலும், உமர்(ரழி) அவர்களின் ஆட்சி காலத்தின் ஆரம்ப இடத்திலும் நிலமை இவ்வாறே நீடித்திருந்து வந்தது என்று இதன் அறிவிப்பாளரில் ஒருவரான ''இமாம் ஜுஹ்ரீ'' அவர்கள் அறிவித்துள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம்)

ரமழான் இரவுத் தொழுகை சில தினங்கள் மட்டும் ஜமாஅத்தாக நடத்தப்பட்டதேன்?
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் நடு நிசியின் போது புறப்பட்டு பள்ளியில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். காலையில் மக்கள் (இதுபற்றி) பேச ஆரம்பித்து விடவே (மறுநாள்) அவர்களை விட அதிகமானோர் கூடி விட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தொழ, அவர்களைப் பின்பற்றி அவர்களும் தொழுதார்கள். காலையில் (முன்போல்) மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். மூன்றாம் நாள் இரவு பள்ளிக்கு வந்தவர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அன்றும் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, அவர்களின் தொழுகையைப் பின்பற்றி தொழப்பட்டது. நான்காம் இரவு வந்த மக்களால் பள்ளி கொள்ளாத நிலை ஏற்பட்டு விட்டது. அன்று நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகைக்குத்தான் வந்தார்கள், (இரவுத் தொழுகைக்கு வரவில்லை) சுப்ஹு தொழுகை தொழ வைத்து முடித்தவுடன் (எப்போதும் தமது சொற்பொழிவுக்கு முன் ஓதக் கூடிய) ''தஷஹ்ஹுது, அம்மா பஃது'' ஆகியவற்றை ஓதிவிட்டு மக்களை நோக்கி, உங்கள் நிலை எனக்கு மறையவில்லை, எனினும் நான் உங்கள் மீது இவ்விரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டு, அவற்றை நீங்கள் தொழ இயலாது போய் விடுவீர்கள் என்பதைப் பயந்தே (நான் இரவு வெளியில் வராமல்) இருந்து விட்டேன் என்று கூறினார்கள். இவ்வாறு ரமழானில் நிகழ்ந்தது. (ஆயிஷா (ரழி), புகாரீ)

மேற்காணும் அறிவிப்புகளில் ரமழான் இரவுத் தொழுகையின் மகத்தான பலன்கள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சில தினங்கள் மட்டுமே ரமழானுடைய இரவுகளில் இத்தொழுகை ஜமாஅத்துடன் நடத்தப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம்.

நபி(ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை 11 ரகாஅத்துகளுக்கு அதிகமாக தொழுததில்லை.

அபூஸலமத்திப்னு அப்திர்ரஹ்மான்(ரழி) அவர்கள் ஒருமுறை ஆயிஷா(ரழி) அவர்களிடம் ரமழானில் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறிருந்தது? என்று கேட்டதற்கு ''ரமழானிலும் அது அல்லாத மற்ற காலங்களிலும் 11 ரகாஅத்துகளை விட அதிகமாக அறவே தொழுததில்லை'' என்று கூறிவிட்டு, (முதலில்) 4 ரகாஅத்துகள் தொழுதார்கள்; அவற்றின் அழகையும், நீளத்தையும் (என்னிடம்) கேட்காதீர் (என்னால் அவற்றை எடுத்தியம்ப இயலாது, அவ்வளவு நிறைவாகம்ருந்தன) பிறகு 4 ரகாஅத்துகள் தொழுதார்கள். அவற்றின் அழகையும், நீளத்தையும் கேட்காதீர் (அவ்வளவு நிiவாககியிருந்தன) பிறகு 3ரகாஅத்துகள் தொழுதார்கள் என்று கூறினார்கள். (அபூஸலமத்துப்னு அப்திர் ரஹ்மான்(ரழி) புகாரீ)

நபி(ஸல்) அவர்கள் ரமழான் நடு இரவில் 8 10 3 பதினொன்று என்ற அமைப்பில் தான் தொழ வைத்துமுள்ளார்கள்.

''நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ரமழானில் ஓரிரவு 8 ரகாஅத்துகளுக்கு வித்ரும் தொழ வைத்தார்கள். மறு நாள் நாங்கள் அவர்களின் வருகையை எதிர்பார்த்து பள்ளியில் கூடியிருந்தோம். அவர்கள் அதிகாலை வரை பள்ளிக்கு வரவில்லை. பிறகு நாங்கள் நபி(ஸல்) அவர்களின் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் புறப்பட்டு வந்து எங்களுக்கு தொழுகை நடத்துவீர்கள் என்று நாங்கள் மிக்க ஆவலோடிருந்தோம் என்று கூறினோம். அதற்கு அவர்கள் இந்(உபரியான) வித்ரு தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விட்டு என்பதைப் பயந்து (இருந்து) விட்டேன் என்றார்கள். (ஜாபிரு பின் அப்தில்லாஹ்(ரழி) இப்னு குஜைமா)

ஆயிஷா(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை ரமழானில் எவ்வாறிருந்தது என்று வினவப்பட்ட போது, ''ரமழானிலும் அது அல்லாத காலங்களிலும் 11 ரகாஅத்துகளுக்கு அதிகமாக அவர்கள் தொழுததில்லை'' என்றுஅவர்கள் பதில் அளித்திருப்பதால் மூலம், ரமழானுக்கென்று அவர்கள் விசேஷமாக எதுவும் தொழாமல், வழக்கமாக - தினசரி தொழுது கொண்டிருந்த 8 10 3 பதினொரு ரகாஅத்துகள் மட்டுமே அவர்கள் தொழுதுள்ளார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ரமழான் இரவுத் தொழுகை பதினொரு ரகாஅத்துகள் என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரம்

ஒருமுறை உபையுப்னுகஃபு(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! ரமழானின் இரவில் நான் ஒரு காரியம் செய்துவிட்டேன் என்றார். அதற்கு அவர் உபையு அவர்களே! அது என்ன? என்றார்கள். அப்போது அவர் என் வீட்டிலுள்ள பெண்கள் நாங்கள் குர்ஆன் (அதிகமாக) ஓத இயலாதவர்கள் ஆகையால் (நீர் எங்களுக்கு தொழ வைத்தால்) உமது தொழுகையைப் பின்பற்றி நாங்களும் தொழுது கொள்கிறோம் என்றார்கள். ஆகவே நான் அவர்களுக்கு 8 ரகாஅத்துகள் தொழ வைத்துவிட்டு, பிறகு வித்ரும் தொழ வைத்தேன் என்றார். அதற்கு அவர்கள் ஏதும் கூறாமல் மௌனமாயிருந்தார்கள். ஆகவே அவர்களின் அந்த மௌனமானது அவர்களின் அங்கீகாரம் என்ற வகையில் சுன்னத்தாகிவிட்டது.
(ஜாபிருபின் அப்தில்லாஹ்(ரழி) அபூயஃலா, தப்ரானீ)

உமர்(ரழி) அவர்கள் ரமழானுடைய இத்தொழுகை தினசரி ரகாஅத்துடன் நடைபெற ஏற்பாடு செய்தல்

''நான் ரமழானில் ஓரிரவு உமர்(ரழி) அவர்களுடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றேன். அப்போது மக்கள் பல்வேறு குழுவினராக இருந்து கொண்டிருந்தார்கள். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். மற்றும் சிலர் தொழுக, அவர்களைப் பின்பற்றி பலரும் தொழுது கொண்டிருந்தார்கள். அதுசமயம் உமர்(ரழி) அவர்கள இம்மக்கள் அனைவரையும் ஒரே இமாமுக்குப்பின் தொழும்படி செய்தால் மிகவும் சிறப்பாயிருக்கும் என்று தாம் முடிவு செய்து, உபையுபின்கஃபு(ரழி) அவர்களுக்குப் பின்னால் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தார்கள்.

பிறகு மற்றொரு இரவு அவர்களுடன் புறப்பட்டு வந்தேன், மக்கள் அனைவரும் ஒரே இமாமைப் பின்பற்றி தொழுவதைக் கண்டு, ''புதிய இவ்வேற்பாடு மிகச்சிறப்பாயுள்ளது'' என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் இரவின் பிற்பகுதியின் சிறப்பை மனதில் கொண்டவர்களாக, ''இவர்கள் நின்று தொழுது கொண்டிருக்கும் இந்நேரத்தைவிட, இவர்கள் (தொழுதுவிட்டு) உறங்கும் அந்நேரமே (தொழுவதற்கு) மேலானதாகும் என்று கூறினார்கள். அப்போது மக்கள் முன்நேரத்தில் தொழுது கொண்டிருந்தனர்.
(அப்துர்ரஹ்மான் (ரழி) புகாரீ) மற்றொரு அறிவிப்பில் உபையுபின் கஃபு(ரழி) அவர்களையும், தமீமுமுத்தாரீ(ரழி) அவர்களையும் உமர்(ரழி) அவர்கள் 11 ரகாஅத்துகள் தொழவைக்கும் படி கட்டளையிட்டார்கள் என்று . (ஸாயுபுபின்யஜீத்(ரழி) முஅத்தா மாலிக்)

இத்தொழுகையை இரவின் முற்பகுதி, நடுப்பகுதி, பிற்பகுதிகளாகிய அனைத்துப் பகுதியிலும் தொழுதல்
''நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (ரமழான்) நோன்பு நோற்றோம், ரமழானில் 7 நாட்கள் மீதமிருக்கும் வரை (22 நாட்கள் வரை) எங்களுக்கு அவர்கள் தொழ வைக்கவில்லை. அதற்குப் பிறகு (23-வது நாள்) இரவில் மூன்றில் ஒரு பகுதி வரை (சுமார் இரவு 10 மணி வரை எங்களுக்கு தொழ வைத்தார்கள்.
பிறகு 24-வது நாள் தொழ வைக்கவில்லை. பிறகு 25-வது நாள் இரவில் பாதிவரை (சுமார் 12மணி வரை) தொழவைத்தார்கள். பிறகு ரமழானில் மூன்று நாள் மீதமிருக்கும் வரை அவர்கள் தொழ வைக்கவில்லை. 27-வது நாள் ஸஹர் உணவு தவறிவிடும் என்று நாங்கள் அஞ்சும் வரை (சுமார் 4 மணி வரை) எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். இத்தொழுகைக்கு தமது மனைவிமார்களையும், குடும்பத்தாரையும் அழைத்துக் கொண்டார்கள். (ஹதீஸ் சுருக்கம், அபூதர்ரு(ரழி) திர்மிதீ)

மேற்காணும் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் ஒரே தொழுகையைத்தான் பலநேரங்களில் தொழுதுள்ளார்கள். இதை உற்று நோக்கும் போது இஷா தொழுகைக்குப் பின் ஸஹர் நேரம் முடிய - சுப்ஹு நேரம் வருவதற்கு முன்னால் வரை தொழப்படும் தொழுகை தான் அது என்பது புலனாகிறது.
இதற்கு ஹதீஸ்களில் கியாமுல்லைல் - இரவுத் தொழுகை, தஹஜ்ஜுது, வித்ரு என்ற பல பெயர்கள் காணப்படுகின்றன. ''தான் தொழுகை'' என்ற பெயரோ, பிற்காலத்தில் ரமழானுடைய மாதத்தில் இரவின் முற்பகுதியில் தாமாக அதிகப்படுத்தி தொழப்படும் 20 ரகாஅத்வுத் தொழுகைக்கு மக்கள் தாமாக சூட்டிக் கொண்டதோர் பெயராகும்.

''வித்ரு'' என்பது இரவுத் தொழுகைக்குரிய பெயர்களில் ஒன்று தான் என்பதற்குச் சான்று.
''நபி(ஸல்) அவர்கள் இரவின் முற்பகுதி, நடுப்பகுதி, பிற்பகுதி ஆகியவற்றில் ஸஹர் நேரம் வரை (பஜ்ரு முன்பு வரை) வித்ரு தொழுதுள்ளார்கள். (ஆயிஷா(ரழி) புகாரீ, முஸ்லிம்)

மேலும் ஜாபிருபின் அல்லாஹ்(ரழி) அவர்களின் வாயிலாக ''இப்னுகுஜைமா''வில் பதிவாகியள்ள இதே தொடரில் மேற்கண்ட அறிவிப்பில் ''நீங்கள் புறப்பட்டு வந்து எங்களுக்கு தொழுகை நடத்துவீர்கள் என்று நாங்கள் மிக்க ஆவலோடிருந்தோம் என்று கூறினோம். அதற்கு அவர்கள் இந்த (உபரியான) ''வித்ரு தொழுகை'' உங்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடும் என்று பயந்து இருந்து விட்டேன் என்றார்கள்'' என்ற வாசகமே நபி(ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை ''வித்ரு'' என்று கூறியிருப்பதன் ''வித்ரு'' என்பதும் இரவுத் தொழுகைக்குரிய மற்றொரு பெயர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்கிறது பொதுவாக இஷாவுக்குப் பிறகு தொழக்கூடிய இரவுத்தொழுகை ஒற்றைப் படையாகத் தொழ வேண்டியிருப்பதால் அதை ''வித்ரு'' என்று அழைக்கப்படுகிறது.

எனவே ரமழான் இரவின் முற்பகுதியில் 8 10 3 தொழுவது நபிவழியாகும் (ஸுன்னத்) இரவின் பிற்பகுதியில் தொழுவதும் நபிவழியாக இருப்பதோடு மிகவும் சிறப்புக்குரியதாகவும் இருக்கிறது. அதிகப்படுத்தி ஜமாஅத்தாக தொழுவது நிச்சயமாக நபிவழியே அல்ல, ஜமாஅத்தாக அல்லாமலும் குறிப்பிட்ட எண்ணிக்கையை நிர்ணயம் செய்யாமலும் விரும்புகிறவர்கள் விரும்பிய எண்ணிக்கையில் எவ்வித நிர்ப்பந்தமோ, சடைவோ இல்லாமல் தனித்தனியாக உபரி வணக்கமாக (நஃபிலாக) தொழுவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை.

ரமளானில் இரவுத்தொழுகை
அருள்மறையாம் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதமாம் ரமளானில் இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாம் கடமையான நோன்பு நோற்பதை கடமையாக்கியிருக்கிறான் இப்புனிதமிக்க மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் தராவீஹ் என்று பெயர் சூட்டப்பட்ட இரவை தொழுகையைப்பற்றி சில கூடுதலான சிறப்புகளை வழங்கியுள்ளார்கள்.

புனிதமிக்க மாதமான பாவங்கள் மன்னிக்க படக்கூடிய, புனிதம் நிறைந்த இறைவனின் அருள்பொழியக் கூடிய மாதமான ரமளானில் நாம் அனைவரும் இரவுத் தொழுகையை சரிவர பேணி இறையருளை பெறுவோமாக.