துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

திங்கள், 27 டிசம்பர், 2010

பொருட் சுவை

உன்னவை என்னவை இல்லை என்றேன் நிம்மதி வந்தது

என்னவை உன்னவை இல்லை என்றேன் பகை வந்தது

என்னவை என்னதே என்றேன் தனிமை வந்தது

என்னவை உன்னவை என்றேன் பாசம் வந்தது

எல்லாம் உம்மவை என்றேன் பரிசு வந்தது

உன்னவை உன்னவையே என்றேன் மதிப்பு வந்தது

நம்மவை நம்மவையே என்றேன் ஒற்றுமை வந்தது

எல்லாம் பொதுமை என்றேன் பெருமை வந்தது

உன்னவை என்னவை என்றேன் உரசல் வந்தது

எல்லாம் நம்மவையே என்றேன் போர் வந்தது

எல்லாம் எனக்கே என்றேன் துன்பம் வந்தது

எல்லாம் ஏதுக்கு என்றேன் இன்பம் வந்தது

எல்லாம் இனிமையே என்றேன் இனிமையே வந்தது

மனது இதுவும் நிரந்தரமல்ல என்றது ஒழுக்கம் வந்தது

உள்ளத்து உள்ளே உற்றுப் பார்த்தேன் ஒற்றுமை வந்தது

உடலும் உனதல்ல உலகும் உனதல்ல மருமை வந்தது

எதுவுமே உனதல்ல யாதுமே நமதல்ல ஈமான் வந்தது

இருத்தலும் வேண்டாம் இரத்தலும் வேண்டாம் ஞானம் வந்தது

இறத்தல் மட்டும் வந்தால் போதும் இறைவன் பயம் வந்தது