துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

புதன், 25 மே, 2011

சுயபரிசோதனை

உங்களது நிலையை என்னவென்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் :


கணவனைத் திருப்தி செய்வதில் நான் என்னுடைய மிகச் சிறந்த பங்களிப்பை வழங்குகின்றேன்.


என்னுடைய குடும்பத்திற்கு இஸ்லாமிய வழிமுறைகளைக் கொண்டு வழி நடத்துகின்றேன்.


குர்ஆனையும், நபிமொழிகள் (ஹதீஸ்களையும்) நான் விரும்பி வாசிக்கின்றேன்.


என்னுடைய குழந்தைகளுக்கு இஸ்லாத்தைப் பற்றிப் போதிக்கின்றேன்.


என்னுடைய கணவனுக்கு என்னுடைய அழகைப் பராமரித்து வருகின்றேன்.


இஸ்லாத்தைப் பற்றிய கேள்விகளுக்குரிய விடைகளை வழங்குவதில் என்னுடைய குழந்தைகளுக்கு உதவுகின்றேன்


இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள இடைவிடாது முயற்சித்துக் கொண்டிருக்கின்ற அதே வேளையில், நான் கற்றவற்றை என்னுடைய வாழ்க்கையில் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டுகின்றேன்.


என்னுடைய தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுகின்றேன்.
நான் என்னுடைய கணவனை அதிகம் நேசிப்பதாகக் கூறுகின்றேன்


தேவைப்படும்பொழுது என்னுடைய கணவருக்கு அறிவுரைகளை வழங்குகின்றேன்


என்னுடைய கணவனுடைய குறிக்கோள்களை அடைவதற்கு உற்சாகத்தையும், ஒத்துழைப்பையும் வழங்குகின்றேன்.


என் கணவரது முயற்சிகளை நான் மதிக்கின்றேன், பாரட்டுகின்றேன் என்பதை அவருக்கு நான் உணர்த்தி வருகின்றேன்.


என்னுடைய நாணத்தை பொது மக்கள் மத்தியில் பாதுகாத்து வருகின்றேன்.


சுன்னத்தான தொழுகைகளைப் பேணி வருகின்றேன்.


ரமளான் மாதத்து நோன்புகளை நோற்று வருகின்றேன். அதில் தவறிய நோன்புகளையும் நான் பின்பு களாவாக நோற்கின்றேன்.


ரமளான் தவிர்த்து விரும்பத்தகுந்த நோன்புகளையும் (சுன்னத்தான, நபிலான) நோற்று வருகின்றேன்.


பிறர் தூங்கக் கூடிய நேரத்தில் நான் எழுந்து தொழுகின்றேன்.