துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

சனி, 12 மார்ச், 2011

ஆடை அணியும் முறை

இஸ்லாத்தில் ஆடை அணிவதற்கும் பல வழிமுறைகள் கூறப்பட்டிருக்கின்றன, அவைகளை நாமும் பேணி நடப்பதினால் நாம் அணியும் ஆடையும் ஒரு கூலிபெற்றுத்தரும் நன்மையாக கருதப்படும்,அவைகள் பின்வருமாறு.

1. அன்னிய மதத்தவர்கள் தங்களின் மதத்தை அடையாளம் காட்டுவதற்காக அணியும் ஆடைகளை அணியக்கூடாது.

யார் இன்னொரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அவரைச்சேர்ந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

2. ஆண், பெண் அணியும் ஆடையைப் போன்றோ, பெண் ஆண், அணியும் ஆடையைப் போன்றோ அணியக்கூடாது.

பெண் அணியும் ஆடையைப்போன்று அணியக்கூடிய ஆணையும்,; ஆண் அணியும் ஆடையைப்போன்று அணியக்கூடிய பெண்ணையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். ஆதாரம் : அபூதாவூத்

பெண்களைப்போன்று வேஷம்போடக்கூடிய ஆண்களையும், ஆண்களைப்போன்று வேஷம்போடக்கூடிய பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். ஆதாரம் : புகாரி

3. பெருமைக்காக ஆடை அணியக்கூடாது

யார் (இவ்வுலகில்) பெருமைக்காக ஆடை அணிகின்றாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையில் இழிவான ஆடையை அணிவிப்பான். பின்பு அதில் நெருப்பு பிடித்துவிடும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம் : அபூதாவூத்

ஆண்கள் கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணியக்கூடாது.

கரண்டைக்கு கீழே இறங்கும் ஆடையின் பகுதி நரகத்தில் வேதனை செய்யப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

இன்னும் ஒரு அறிவிப்பில் :-நாளை மறுமையில் அல்லாஹ் மூன்று பேரோடு பேசவும்மாட்டான், இன்னும் அவர்களை பார்க்கவும் மாட்டான். அவர்களை (பாவத்திலிருந்து) தூய்மை படுத்தவும்மாட்டான். அவர்களுக்கு பெரும் வேதனையுமுண்டு என்று மூன்று தடவை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அப்போது) அபூதர் (ரலி) அவர்கள் (அப்படி) நஷ்டவாளியும் கைசேதமுமுள்ளவர்கள் யார் என வினவினார்கள்? கரண்டைக்கு கீழ் ஆடை அணிபவனும், கொடுத்ததை சொல்லிக்காட்டுபவனும், பொய்ச்சத்தியம் பண்ணி தன் பொருளை விற்பவனும் என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்

கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணிபவர்கள் காட்டும் பொய்ச் சான்றுகள்.

1. அதிகமானவர்கள் கரண்டைக்காலுக்கு கீழ்தானே ஆடை அணிகிறார்கள் ,

2. தையல் காரர் நீளமாக தைத்துவிட்டார் ,

3. நான் பெருமைக்காக அணியவில்லை.

4. கரண்டைக்கு மேல் அணிந்தால் மக்கள் என்னைப் பழிப்பார்கள்.

5. இதைப்பற்றிய சட்டமோ தண்டனையோ எனக்கு தெரியாது.

6. இது பெரும்பாவமில்லை.

நொண்டிக் குதிரைக்கு சறுக்கிய சாட்டு என்பதைப் போல் அல்லாஹ்வின் நபியின் பொன்மொழிக்கு இப்படி விளக்கம் கொடுப்பது ஒரு முஃமினின் பண்பாக இருக்கக்கூடாது. யார் அல்லாஹ்வையும், அவனின்தூதரையும் முற்றிலும் அஞ்சுகிறாரோ அவருக்கு மேலே கூறப்பட்ட நபி மொழியே போதுமானது.

5. உருவமுள்ள ஆடையை அணியக்கூடாது. இதில் ஆண்களும் பெண்களும் சமமே.

ஆயிஷா (ரலி) அவர்கள் உருவமுள்ள தலையணையை வாங்கியிருந்தார்கள், நபியவர்கள் வீட்டுக்குள் வந்தபோது அதைக்கண்டு வீட்டுக்குள் நுழையாமல் கதவடியிலேயே நின்று விட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் நபியவர்களின் முகத்திலே வெறுப்பைத் தெரிந்து கொண்டபின் நான் அல்லாஹ்விடத்திலும் அவனின் தூதரிடத்திலும் பாவமன்னிப்புத்தேடுகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன் என்று கேட்டேன். இந்த உருவத்தை தீட்டியவர்கள் நாளை மறுமையிலே வேதனை செய்யப்படுவார்கள், இன்னும் நீங்கள் படைத்ததற்கு உயிரூட்டுங்கள் என்றும் அவர்களுக்கு சொல்லப்படும், என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள் . ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

6. ஆடை அணியும் விஷயத்தில் வீண் விரயம் செய்யக்கூடாது இதில் ஆண்களும் பெண்களும் சமமே .

பெருமை இல்லாமலும், வீண் விரயம் செய்யாமலும் உண்ணுங்கள், பருகுங்கள், ஆடை அணியுங்கள், தர்மமும் செய்யுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :அபூதாவூத்

7. மேனி தெரியுமளவுக்கு மெல்லிய, அல்லது சிறிய உடையை அணியக்கூடாது.

8. வெள்ளை ஆடை அணிவது மிகவும் நல்லது.

வெள்ளை ஆடையை அணியுங்கள் அது மிகவும் தூய்மையும் நல்லதுமாயிருக்கும். உங்களின் மைய்யித்தை அதிலேயே கஃபனுமிடுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். .ஆதாரம் : அபூதாவூத், நஸாயி , திர்மிதி

9. பெண்கள் தங்களின் மேலாடையை எப்படி வைத்துக்கொள்வது என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். ஒரு சாண் இறக்கி உடுக்கவேண்டுமென்று நபியவர்கள் விடையளித்தார்கள். அப்போது கால்பாதம் தெரிகின்றதே! என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கேட்க ஒரு முழமளவிற்கு நீட்டி உடுத்துக்கொள்ளட்டும். அதைவிடவும் அதிகப்படுத்தக்கூடாது என்றார்கள் நபியவர்கள். ஆதாரம் : திர்மிதி

10. இறுக்கமான, மற்றவர்களின் உள்ளத்தில் தவறான சிந்தனைகளை உருவாக்கும், இன்னும் உறுப்புக்களின் அமைப்பை வெளிப்படுத்தக்கூடியது போன்ற ஆடைகளை அணியக்கூடாது விஷேஷமாக பெண்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

11. ஆண்கள் தங்கம் இன்னும் பட்டாடையை அணியக்கூடாது.

தங்கத்தையும் , பட்டையும் அணிவது என் உம்மத்திலுள்ள ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டிருக்கின்றது, இன்னும் அந்த உம்மத்தின் பெண்களுக்கு அது ஹலாலா (ஆகுமா ) க்கப்பட்டிருக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . ஆதாரம் : திர்மிதி

நபி (ஸல்) அவர்கள் ஒருவரின் கையில் தங்க மோதிரத்தைப் பார்த்து அதைக்கழட்டி வீசிவிட்டு உங்களில் ஒருவர் நெருப்புத்தணலை எடுத்து தன் கையில் வைத்துக் கொள்கின்றார் என்று கூறினார்கள், நபி (ஸல்) அவர்கள் சென்றதற்கு பிறகு அந்த மனித(நபித்தோழ)ரிடம் அந்த மோதிரத்தை எடுத்து பிரயோசனமடைந்து கொள் என்று (அங்கிருந்த நபித்தோழர்கள்) கூறினார்கள் , அதற்கு அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்கள் வீசிய மோதிரத்தை நான் எடுக்க மாட்டேன் என்று கூறி (அதை எடுக்க மறுத்து விட்டார்) ஆதாரம் : முஸ்லிம்

12. செருப்பு, இன்னும் ஆடைகளை அணியும் போது வலது பக்கத்திலிருந்து ஆரம்பிப்பது சுன்னத்தாகும்.

நபி (ஸல்) அவர்கள் செருப்பு அணியும்போதும், தலைவாரும் போதும் சுத்தம் செய்யும்போதும் இன்னும் அவர்களின் எல்லாக்கருமங்களிலும் வலது பக்கத்தை முற்படுத்துவதை விரும்புவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி

13. ஒரு செருப்பை மாத்திரம் அணிந்து கொண்டு நடக்கக்கூடாது. அப்படி நடப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்

ஒரு செருப்பை அணிந்துகொண்டு உங்களில் ஒருவர் நடக்கவேண்டாம் , இரண்டையும் அணிந்து கொண்டு நடக்கட்டும், அல்லது இரண்டையும் கழட்டிவிட்டு நடக்கட்டும் என்பதாக நபி (ஸல்) கூறினார்கள். ஆதாரம் : புகாரி முஸ்லிம்

14. நஜீஸான (அசுத்தமான) தோலினால் செய்யப்பட்ட செருப்பை அணியக்கூடாது.

15. புதிய ஆடையை அணிந்த ஒருவரை பார்க்கும்போது இந்த துஆவை ஓதவேண்டும்
اِلْبَسْ جَدِيْدًا وَعِشْ حَـمِيْدًا وَمُتْ شَهِيْدًا

16. புது ஆடையை அணியும் போது ஓதும் துஆ
اَللَّهُمَّ لَكَ الْـحَـْمدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ مِنْ خَيْـرِهِ وَخَيْـرِ مَا صُنِعَ لَهُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَّرِّ مَا صُنِعَ لَهُ.

17. ஆடை அணியும்போது بـسمِ الله என்று சொல்லி அணிந்து , மேலும் பின்வரும் துஆவையும் ஓத வேண்டும் .
اَلْـحَمْدُ للهِ الَّذِيْ كَسَانِـيْ هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْـرِ حَوْلٍ مِنِّـيْ وَلاَ قُوَّةٍ .


இன்ஷா அல்லாஹ் அடுத்து வருவது :தூங்கும் முறை