துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

புதன், 5 ஜனவரி, 2011

எழுச்சி பெறு இளைஞனே!!!

கற்பனை உலகின் கதாநாயகனாய்
கனவு காணும் இளைஞனே!
விழித்தெழு!

கொஞ்சம் விழித்துப் பார்!
உன்னைச் சுற்றி,
வறுமையின் கோடுகள் வரிவரியாய்......

கொஞ்சம் விழித்துப் பார்!
உன்னைச் சுற்றி,
வெள்ளை உடுப்பில் கருப்பு ஊழல்கள்..

கொஞ்சம் விழித்துப் பார்!
உன்னைச் சுற்றி,
வேலை தேடுவதே வேலையாகப் பலர்.....

விழித்தெழு நண்பா!
மதில் மேல் உட்கார்ந்து கொண்டு
மையல் பேசுவதை விட்டு விட்டு

மனிதம் பேசு!
மகாத்மாவாக மாறாவிட்டாலும்
பரவாயில்லை மனிதனாக மாறு!

செயலாற்றத்தில்தான் இருக்கிறது!
நன்மைக்கு நிழலாய் இருங்கள்!
தீமைக்கு நெருப்பாய்ச் சுடுங்கள்!
தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாதே!

கதிரவனைப் பார்!
மாலையில் மங்கலாய் மறைந்தாலும்
மறுநாள் காலையில் மலராமலா இருக்கிறது?

விழித்தெழு நண்பா!
மீன்குஞ்சு நீந்துவதற்கு
துணையையா தேடுகிறது?

கடலலை சீறி எழ
காலத்தையா எதிர்பார்க்கிறது?

மின்மினிப் பூச்சி மின்னுவதற்கு
மின்சாரமா கேட்கிறது?

நீ மட்டும் ஏன் நிர்ப்பந்தத்தை
நினைத்துக் கொண்டிருக்கிறாய்?
புறப்படு நண்பா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக